News September 28, 2025
காவல்துறை பொறுப்பு ஏற்க வேண்டும்: அன்புமணி

கரூர் பெருந்துயருக்கு காவல்துறையின் இன்டலிஜென்ஸ் பிரிவு பொறுப்பு ஏற்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். அரசியல் நிகழ்வுகளில் பாரபட்சம் பார்க்காமல், சரியான இடங்களை அரசு ஒதுக்க வேண்டும் என தெரிவித்த அவர், தனிநபர் கமிஷன் உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், மக்களும் அரசியல் நிகழ்வுகளில் குழந்தைகளை கூட்டிவருவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
Similar News
News September 28, 2025
கரூரில் நடந்தது என்ன? கலெக்டர் விளக்கம்

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கிய 110 பேர் அரசு, தனியார் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தங்கவேலு தெரிவித்துள்ளார். பெரும் அசம்பாவிதம் நடந்த உடனேயே மீட்பு பணிகளை முதலமைச்சர் முடுக்கிவிட்டதாக கூறிய அவர், அரசின் உடனடி நடவடிக்கையால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டதாகவும் விளக்கமளித்துள்ளார். மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ உதவிமையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
News September 28, 2025
ACC தலைவரிடம் கோப்பையை பெறுமா இந்தியா?

ஆசிய கோப்பை ஃபைனலில் இன்று இந்தியா, பாகிஸ்தான் மோதுகின்றன. இதில் வெல்லும் அணி ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ACC) தலைவரிடம் இருந்து கோப்பையை பெறும். தற்போது ACC தலைவராக இருப்பவர் பாக்., அமைச்சர் நக்வி. எனவே, இன்று இந்தியா வென்றால், அவரிடம் இருந்து கோப்பையை பெறுமா என்ற கேள்வி ரசிகர்கள் இடையே எழுந்துள்ளது. மேலும், ஃபைனலுக்கு முந்தைய கேப்டன்கள் போட்டோஷூட்டை இந்திய புறக்கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
News September 28, 2025
BREAKING: தமிழகம் முழுவதும் நாளை இயங்காது

கரூர் பிரசாரத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நாளை(செப்.29) மாநிலம் முழுவதும் கடைகள் அடைக்கப்படும் என தமிழக வணிகர் சங்கர் பேரவை அறிவித்துள்ளது. நாளை மாலை 6 மணி வரை கடைகள் அடைக்கப்படும் எனவும் அத்தியாவசிய தேவைகளுக்காக மெடிக்கல், பால் உள்ளிட்ட கடைகள் திறந்திருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. கரூர் துயர சம்பவத்தில் இதுவரை 40 பேர் உயிரிழந்துள்ளனர். SHARE IT.