News March 26, 2025
காவல், தீயணைப்பு நிலையங்கள்: CM பதில்

TNல் புதிய காவல் நிலையங்கள், தீயணைப்பு நிலையங்கள் அமைக்கப்படும் என CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பேரவையில், எம்எல்ஏக்கள் பலர் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளித்த ஸ்டாலின், கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு சாத்தியக்கூறு இருக்கும் இடங்களில் புதிதாக காவல், தீயணைப்பு நிலையங்கள் அமைக்கப்படும் என உறுதியளித்தார். காவல்துறை மானியக் கோரிக்கையில் இதற்கான அறிவிப்புகள் வெளியாகும் எனவும் கூறினார்.
Similar News
News November 8, 2025
தமிழை வைத்து தமிழர்களை சுரண்டும் திமுக: நயினார்

தேர்தல் வாக்குறுதிபடி காளை வளர்ப்போருக்கு மாதம் ₹1,000 ஊக்கத்தொகையை திமுக வழங்காதது ஏன் என நயினார் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழை வைத்து தமிழர்களைச் சுரண்டி திமுக ஆட்சியை பிடித்ததாக சாடியுள்ள அவர், CM ஸ்டாலினின் அரசு மாடுபிடி வீரர்களுக்கான பரிசுத் தொகையை நிறுத்திவிட்டதாகவும் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக, திமுக அரசு இன்றுவரை வாய்திறக்க மறுப்பதாகவும் நயினார் தெரிவித்துள்ளார்.
News November 8, 2025
சார்லி சாப்ளின் பொன்மொழிகள்!

*இந்தப் பொல்லாத உலகில் எதுவுமே நிரந்தரமல்ல, உங்கள் பிரச்சனைகள் கூட இல்லை. *கண்ணாடியே என் சிறந்த நண்பன், ஏனெனில் நான் அழும்போது அது சிரிப்பதில்லை. *இது ஒரு இரக்கமற்ற உலகம், அதை சமாளிப்பதற்கு ஒருவர் இரக்கமற்றவராக இருக்க வேண்டும். *நாம் அனைவரும் நம்மை நாமே இழிவாக நினைக்கின்றோம். அதுதான் இந்த உலகின் பிரச்சனை. *ஆசைப்படுவதை மறந்துவிடு. ஆனால், ஆசைப்பட்டதை மறந்துவிடாதே.
News November 8, 2025
கோவை மாணவி மீது பழிசுமத்த கூடாது: கனிமொழி

பெண்களுக்கு எதிரான குற்றங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என கனிமொழி தெரிவித்துள்ளார். இந்த விஷயத்தில், அப்பெண் மீது பழிசுமத்துவதை சமூகம் நிறுத்த வேண்டும் என்றும், குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். முன்னதாக, பாதிக்கப்பட்ட மாணவியின் மீது பழிசுமத்தும் விதமாக திமுக கூட்டணியில் உள்ள கொங்கு ஈஸ்வரன் MLA பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


