News March 26, 2025

காவல், தீயணைப்பு நிலையங்கள்: CM பதில்

image

TNல் புதிய காவல் நிலையங்கள், தீயணைப்பு நிலையங்கள் அமைக்கப்படும் என CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பேரவையில், எம்எல்ஏக்கள் பலர் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளித்த ஸ்டாலின், கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு சாத்தியக்கூறு இருக்கும் இடங்களில் புதிதாக காவல், தீயணைப்பு நிலையங்கள் அமைக்கப்படும் என உறுதியளித்தார். காவல்துறை மானியக் கோரிக்கையில் இதற்கான அறிவிப்புகள் வெளியாகும் எனவும் கூறினார்.

Similar News

News March 29, 2025

இந்தியர்களிடம் எவ்வளவு தங்கம் உள்ளது தெரியுமா?

image

சில நாடுகளின் ரிசர்வ் வங்கியை விட இந்தியர்கள் அதிக தங்கம் வைத்திருப்பதாக HSBC global தெரிவித்துள்ளது. சுமார் 25 ஆயிர டன்களுக்கும் அதிகமான தங்கத்தை இந்தியர்கள் வைத்துள்ளனராம். இவற்றின் மதிப்பு ₹150 லட்சம் கோடி. இது, இந்தியா, அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், ரஷ்யா, சீனா, சுவிட்சர்லாந்து, ஜப்பான் நாடுகளின் ரிசர்வ் பேங்குகளில் இருக்கும் மொத்த தங்கத்தையும் விட பல மடங்கு அதிகமாம். எப்படி வாங்குறாங்களோ?

News March 29, 2025

தோனியை கேலி செய்த சேவாக்

image

RCBக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் 9வது வீரராக களமிறங்கிய எம்.எஸ்.தோனியை, வீரேந்திர சேவாக் கிண்டல் செய்துள்ளார். ரொம்ப சீக்கிரமாகவே பேட்டிங்கிற்கு தோனி வந்ததாக நிகழ்ச்சி ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார். வழக்கமாக 19 அல்லது 20வது ஓவர் வரும் தோனி ஏன் 16ஆவது ஓவரில் வந்தார் என கமெண்ட் அடித்துள்ளார். அதனுடன் தோனி வேகமாக வந்தாரா? இல்லை விக்கெட் அவ்வளவு வேகமாக விழுந்ததா? எனவும் நையாண்டி செய்துள்ளார்.

News March 29, 2025

கஞ்சா வியாபாரி என்கவுண்ட்டரில் கொலை

image

உசிலம்பட்டி போலீஸ் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த கஞ்சா வியாபாரி பொன்வண்ணன் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கடந்த வாரம் காவலர் முத்துக்குமரன் கஞ்சா வியாபாரிகளுக்கு அறிவுரை வழங்கியபோது, பொன்வண்ணன் அவரை கல்லால் அடித்துக் கொன்றார். இதனையடுத்து, கம்பம் அருகே காட்டுப்பகுதியில் ஒளிந்திருந்த அவரை போலீசார் கைது செய்ய முயன்றபோது ஏற்பட்ட மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

error: Content is protected !!