News April 15, 2024
விஜய் மீது போலீஸில் புகார்

நடிகர் விஜய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி டிஜிபி அலுவலகத்தில் சமூக ஆர்வலர் ஒருவர் புகார் அளித்துள்ளார். அவர் நடித்துவரும் G.O.A.T படத்தின் முதல் பாடல் நேற்று வெளியானது. இந்தப் பாடல், இளைஞர்கள் மத்தியில் போதைப் பொருள், ரவுடியிசத்தை ஊக்குவிக்கும் வகையில் இருப்பதாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு, விஜய் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Similar News
News April 7, 2026
நடிகை சுபாஷினி மரணம்.. தொடரும் சோகம்

தமிழ் சீரியல் நடிகைகளின் தற்கொலைகள் அதிகரித்து வருவது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ‘சிறகடிக்க ஆசை’ சீரியல் நடிகை ராஜேஸ்வரி, குடும்ப பிரச்னையால் தூக்க மாத்திரைகளை உட்கொண்டு விபரீத முடிவை எடுத்தார். ‘துர்கா’ சீரியல் நடிகை நந்தினியும் தாயுடன் ஏற்பட்ட பிரச்னையால் உயிரை மாய்த்துக் கொண்டார். அவ்வரிசையில் ‘கயல்’ சீரியல் நடிகை<<19582386>> சுபாஷினியும்<<>> தவறான முடிவை எடுத்தது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
News April 7, 2026
காரைக்குடி தொகுதியில் சீமானுக்கு புது சிக்கல்!

2021 தேர்தலில் நாதகவுக்கு ஒதுக்கப்பட்ட கரும்பு விவசாயி சின்னம் லோக்சபா தேர்தலில் வேறு கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. தற்போது அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக உள்ள நாதகவுக்கு கலப்பையுடன் கூடிய விவசாயி சின்னத்தை ECI ஒதுக்கியுள்ளது. இந்நிலையில் சீமான் போட்டியிடும் காரைக்குடியில், இந்திய குடியரசு கட்சியின் கருப்பையாவுக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இது வாக்களர்களுக்கு குழப்பத்தை உண்டாக்கலாம்.
News April 7, 2026
BREAKING: மீண்டும் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு?

ஈரானுக்கு டிரம்ப் கடுமையான எச்சரிக்கை விடுத்ததால் போர் பதற்றம் மீண்டும் உச்சத்துக்கு சென்றுள்ளது. இதனால் சிலிண்டர் மற்றும் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படுமோ என்ற அச்சம் மக்களிடம் எழத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் LGP சிலிண்டர் தட்டுபாடு இல்லை எனவும், பெட்ரோல் பங்க்களும் வழக்கம் போல் இயங்கி வருவதாகவும் மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. நேற்று மட்டும் 6,500 டன் வர்த்தக LPG விற்பனை செய்யப்பட்டுள்ளது.


