News October 9, 2025
மகனை அடித்து துன்புறுத்தும் போலீஸ்: வேலூர் இப்ராஹிம்

தன் மகன் மீது பொய் வழக்கு போட்டு, போலீசார் அடித்து சித்ரவதை செய்வதாக பாஜக நிர்வாகி வேலூர் இப்ராஹிம் குற்றஞ்சாட்டியுள்ளார். தன்னை அடக்குவதற்கு தனது குடும்பத்தின் மீது தாக்குதல் நடத்துவதாகவும், குற்றத்தை ஒப்புக்கொள்ளச் சொல்லி தனது மகனை வற்புறுத்துவதாகவும் அவர் புகார் தெரிவித்துள்ளார். மேலும், தனது மகன் கஞ்சா வைத்திருந்ததை ஆதாரப்பூர்வமாக நிரூபித்தால் தண்டனையை அனுபவிக்கட்டும் என்றும் கூறியுள்ளார்.
Similar News
News October 9, 2025
BREAKING: திமுகவுடன் கூட்டணி.. முடிவை அறிவித்தார்

‘கை’ நம்மை விட்டு எங்கும் போகாது என கூறியுள்ள உதயநிதி ஸ்டாலின், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இருப்பதற்கான முடிவை அறிவித்துள்ளார். கடந்த சில மாதங்களாக கூடுதல் சீட்டு, ஆட்சியில் பங்கு உள்ளிட்ட கோரிக்கைகளை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் எழுப்பி வருகின்றனர். அவர்களை திமுக சமாதானம் செய்துவிட்டதாக கூறப்படுகிறது. ராகுல் – விஜய் தொலைபேசியில் பேசிய விவகாரத்தால் கூட்டணி மாறவும் வாய்ப்புள்ளதாக பேசப்பட்டது.
News October 9, 2025
இந்தியாவில் EV காரை அறிமுகம் செய்யும் Skoda

Skoda நிறுவனம், இந்தியாவில் 2027-28 ஆண்டில் அதன் EV கார்களை அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. அதற்குள் இந்தியாவில் EV கார்களுக்கான சார்ஜிங் உள்கட்டமைப்பு மேம்படும் என எதிர்பார்ப்பதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. மேலும், உள்ளூர்மயமாக்கப்பட்ட சப்ளையர் தளத்தை அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. Skoda நிறுவனம் வெளிநாடுகளில் பிரீமியம் ரக EV கார்களை விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
News October 9, 2025
இந்த உணவுகளை சுடவைச்சி சாப்பிடாதீங்க!

இரவில் சமைத்த உணவு மீந்து போனால், அதனை காலையில் சுடவைத்து சாப்பிடும் பழக்கம் பலரின் வீடுகளிலும் உள்ளது. இருப்பினும், அப்படி சில உணவுகளை சுடவைத்து சாப்பிடக்கூடாது என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். சுடவைப்பதால் சில உணவுகளால் செரிமான கோளாறுகள் ஏற்படுவதுடன், அவை வயிற்று உபாதைகளையும் உண்டாக்கும். அது என்னென்ன என தெரிந்து கொள்ள மேலே உள்ள படங்களை வலது பக்கம் Swipe பண்ணி பாருங்க. SHARE பண்ணுங்க.