News May 24, 2024

பொதுமக்களுக்கு காவல்துறை அறிவுறுத்தல்

image

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்துவரும் நிலையில் மின்சாரம் தொடர்பாக பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை காவல்துறை வெளியிட்டுள்ளது. ஈரக் கையால் மின் இணைப்புகளை தொடாதீர்கள். மழை பெய்யும்போது மின்சாதனப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம். மின்சார தாக்குதலை தவிர்க்க ரப்பர் காலணிகளை அணிய வேண்டும். மின்சார பழுது ஏற்பட்டால் மின்சார வாரியத்தை அணுக வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.

Similar News

News September 16, 2025

குறுக்கே சுவர் எழுப்பிய மத்திய அரசு: வைகோ

image

CM ஸ்டாலின் அளித்த வாக்குறுதிகளை பெரும்பாலும் நிறைவேற்றிவிட்டதாக வைகோ கூறியுள்ளார். திருச்சி மதிமுக மாநாட்டில் பேசிய அவர், திமுக சில வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாததற்கு குறுக்கே சுவர் எழுப்பிய மத்திய அரசு தான் காரணம் என்று விமர்சித்துள்ளார். மேலும், 2026 தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மை பெறும் என்பதை இம்மாநாட்டில் பிரகடனம் செய்வதாகவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். உங்கள் கருத்து என்ன?

News September 16, 2025

மதமென பிரிந்தது போதும்.. மனதை தொட்ட நிகழ்வு

image

இந்துவாக பிறந்து, தேவாலயத்தில் வளர்ந்து, இஸ்லாமிய நபராக வாழ்ந்த கதையை ‘சிட்டிசன்’ படத்தில் பார்த்திருப்போம். அதேபோல்தான், கேன்சரால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், தனது இறுதிச்சடங்கை இந்து முறைப்படி செய்ய விருப்பப்பட்டுள்ளார். அவருக்கு ஆதரவாக யாரும் இல்லாத நிலையில், இஸ்லாமியரான சஃபீர் என்பவர், கிறிஸ்தவ மறுவாழ்வு மையத்தில் இறுதிச்சடங்கை செய்துள்ளார். இந்த மனதை வருடும் சம்பவம் கேரளாவில் நிகழ்ந்துள்ளது.

News September 16, 2025

திராவிட கட்சிகள்: அன்று முதல் இன்று வரை

image

திராவிடர் கழகத்திலிருந்து (1944), திமுக (1949), திமுகவிலிருந்து தமிழ் தேசியக் கட்சி (1949), அதிமுக (1972), மதிமுக (1993) என உருவானது. இவற்றில் திமுக, அதிமுக ஆகியவை ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ளன. இந்நிலையில், மதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா புதிய கட்சியை தொடங்கியுள்ளார். திராவிட கட்சிகளின் செயல்பாடுகளுக்கு உங்கள் மார்க் எவ்வளவு? ஏன்? என்று கமெண்ட்டில் சொல்லுங்க.

error: Content is protected !!