News August 4, 2025

பள்ளி தண்ணீர் தொட்டியில் நஞ்சை கலந்த பிஞ்சு..!

image

கர்நாடகாவில் தொடக்க பள்ளியின் தண்ணீர் தொட்டியில் 5-ம் வகுப்பு மாணவன் விஷம் கலந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேங்க் லீடராக தன்னை நினைத்துக் கொண்ட அந்த பையனின் பேச்சை, சக மாணவர்கள் கேட்கவில்லையாம். இதனால், வீட்டில் இருந்து பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து வந்து, இந்த கிரிமினல் வேலையை அவன் செய்திருக்கிறான். போலீஸ் விசாரித்தபோது குட்டி கேங்க் லீடர் வசமாக சிக்கியுள்ளான். இதெல்லாம் தேவை தானா?

Similar News

News August 5, 2025

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஆகஸ்ட் 5) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

News August 5, 2025

வேலைவாய்ப்பு பற்றி வெள்ளை அறிக்கை இல்லை: EPS

image

தமிழகம் கல்வியில் சிறந்து விளங்குவதற்கு கடந்த அதிமுக அரசு அமைத்த அடித்தளமே காரணமென EPS தெரிவித்துள்ளார். நெல்லையில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், 17 அரசு மருத்துவம், 21 பாலிடெக்னிக், 67 கலை அறிவியல் கல்லூரிகளை கடந்த அதிமுக அரசு அமைத்ததாக குறிப்பிட்டார். உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை திமுக நடத்தியதாகவும், அதன்மூலம் எத்தனை வேலைவாய்ப்புகள் கிடைத்தது என்பது பற்றி வெள்ளை அறிக்கை வெளியிடவில்லை என்றார்.

News August 5, 2025

அனுபவம் சொல்லித்தரும் பாடம்

image

*உங்களால் எல்லாரையும், எல்லா நேரத்திலும் திருப்திப்படுத்த முடியாது *உங்கள் சுயமதிப்பானது உங்களை சார்ந்ததே. உங்களை பற்றி மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதல்ல *சிலர், சில சமயங்களில் கடுமையாக நடந்து கொள்வதற்கு நீங்கள் தான் காரணம் என்று நினைக்காதீர்கள். அவர்களின் சொந்தப் பிரச்சனையால் அவர்கள் அப்படி நடந்துகொள்ள நேரிட்டிருக்கலாம்…. உங்கள் அனுபவத்தில் நீங்கள் கற்றுக் கொண்டதை கமெண்ட்டில் பகிரலாமே?

error: Content is protected !!