News April 15, 2025

போக்சோ வழக்கு… பரபரப்பு தீர்ப்பு

image

15 வயது பெண், 22 வயது இளைஞரால் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், மும்பை ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. நவிமும்பையை சேர்ந்த சிறுமி, 2020-ல் இளைஞருடன் உபிக்கு சென்றவர், 10 மாதம் கழித்து கர்ப்பிணியாக வீடு திரும்பினார். இதனால், இளைஞர் மீது போக்சோ வழக்கு பாய, விசாரித்த கோர்ட், இச்சிறுமிக்கு தான் செய்வது என்னவென்று தெரியும், விரும்பியே சென்றுள்ளார் எனக் கூறி, இளைஞருக்கு ஜாமின் வழங்கியுள்ளது.

Similar News

News October 17, 2025

தவெக மாவட்ட செயலாளருக்கு ஜாமின்

image

கரூரில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மீது தாக்குதல் நடத்தியதாக சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து ஜாமீன் கேட்டு கரூர் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து மதுரை HC-ல் அவரது தரப்பில் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த கோர்ட் நிபந்தனையுடன் அவருக்கு ஜாமின் வழங்க உத்தரவிட்டது.

News October 17, 2025

₹500 நோட்டுகள்.. வெளியான அதிர்ச்சி தகவல்

image

இந்தியாவில் 2024- 25ம் நிதியாண்டில் மட்டும் 2.17 லட்சம் எண்ணிக்கையில் போலி ரூபாய் நோட்டுகள் கண்டறியப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில், 1.17 லட்சம், ₹500 நோட்டுகளாம். ஒவ்வொரு ரூபாய் நோட்டிலும் வெள்ளை இடம் இருக்கும். அதனை மேலே பிடித்து பார்த்தால் காந்தி முகம் வாட்டர்மார்க்காக தோன்றும். ₹500 நோட்டாக இருந்தால், 500 என்ற எண் அதில் தெரியும். போலி நோட்டு அச்சிடுபவர்களால் இதனை அச்சிட முடியாது. SHARE

News October 17, 2025

வழக்கத்தைவிட கூடுதல் மழை!

image

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்றுவரை, இயல்பைவிட 42% கூடுதலாக பெய்துள்ளதாக IMD தெரிவித்துள்ளது. நேற்று வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், தமிழக முழுவதும் பரவலாக மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த காலகட்டத்தில், இயல்பாக 77.1 மி.மீ. மழை பெய்யும் நிலையில், இன்றுவரை 109.7 மிமீ மழை பெய்துள்ளது.

error: Content is protected !!