News March 16, 2025

பெ.ம.க. கட்சியின் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் நீக்கம்

image

பெருந்தலைவர் மக்கள் கட்சியின் (பெ.ம.க.) தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகளை கட்சியிலிருந்து அக்கட்சித் தலைவர் என்.ஆர். தனபாலன் நீக்கியுள்ளார். தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ரஸ்னா எஸ்.பி. மாரியப்பன், பொருளாளர் மில்லை எஸ். தேவராஜ் ஆகியோர் கட்சியின் கொள்கை, கோட்பாட்டுக்கு எதிராக செயல்பட்டதாகவும், ஆதலால் 2 பேரும் நீக்கப்படுவதாகவும் என்.ஆர். தனபாலன் கூறியுள்ளார்.

Similar News

News March 17, 2025

அதிக நேரம் ரம்ஜான் நோன்பு இருப்பவர்கள் யார் தெரியுமா?

image

ரம்ஜான் மாதத்தில் அதிகாலை முதல் மாலை வரை உண்ணாமல், நீர் அருந்தாமல் இஸ்லாமியர்கள் நோன்பு இருப்பார்கள். சூரிய உதயம், மறைவை பொறுத்து ஒவ்வொரு நாட்டிலும் நோன்பு நேரம் மாறுபடுகிறது. கிரீன்லாந்து, ஐஸ்லாந்து நாட்டு மக்கள் ஒருநாளில் 16 மணி 30 நிமிடங்கள் நோன்பு இருக்கிறார்களாம். இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள் 13 மணி 45 நிமிடங்கள் நோன்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.

News March 17, 2025

காலமானார் முன்னாள் மத்திய அமைச்சர்

image

முன்னாள் மத்திய அமைச்சரும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் தந்தையுமான தேபேந்திர பிரதான் மரணம் அடைந்துள்ளார். 84 வயதான அவர் டெல்லியில் உள்ள அவரது மகனின் இல்லத்தில் உடல்நலக் குறைவால் காலமானார். MBBS படித்த தேபேந்திர பிரதான், தனது பாதையை அரசியல் பக்கம் திருப்பினார். 1998 – 2001 காலகட்டத்தில் வாஜ்பாய் அரசில் மத்திய சாலை போக்குவரத்து, வேளாண்துறை இணையமைச்சராக அவர் பதவி வகித்துள்ளார்.

News March 17, 2025

அதிமுகவில் பிளவா? இபிஎஸ் பதில்

image

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய இபிஎஸ்சிடம் அதிமுகவில் பிளவு ஏற்படப் போவதாக வெளியாகும் செய்திகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், அதிமுகவில் பிளவு எதுவும் இல்லை என்று கூறினார். தாம் முதல்வரானது முதல் அதிமுகவை உடைக்க முயற்சி நடந்ததாகவும், ஆனால் அது நடக்கவில்லை என்றும், அதிமுகவை உடைக்க நினைப்பவர்கள்தான் உடைந்து போவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

error: Content is protected !!