News October 21, 2025

போலீஸ்காரர்களுக்கு PM மோடியின் ராயல் சல்யூட்!

image

இந்தியாவில் பணியின்போது வீர மரணமடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ’காவலர் வீரவணக்க நாள்’ அக்.21-ல் அனுசரிக்கப்படுகிறது. இதுகுறித்து பதிவிட்ட PM மோடி, காவல் துறையினரின் தைரியத்தையும் கடமையுணர்வையும் வணங்குவதாக தெரிவித்துள்ளார். மேலும், நாட்டின் பாதுகாப்பிற்காக உயிர்நீத்த அவர்களின் உன்னத தியாகத்தை நினைவுகூர்வதாகவும், அவர்கள் காட்டும் அர்ப்பணிப்புக்கு நன்றி எனவும் பதிவிட்டுள்ளார்.

Similar News

News January 17, 2026

திங்கள்கிழமை.. வந்தாச்சு மகிழ்ச்சியான செய்தி

image

₹3,000 அடங்கிய தமிழக அரசின் பொங்கல் பரிசை இதுவரை 2.15 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் பெற்றுள்ளனர். ஆனால் பொங்கலுக்காக ஊருக்கு சென்றவர்கள் பொங்கல் பரிசை பெற முடியாமல் உள்ளனர். இந்நிலையில், திங்கள்கிழமை (ஜன.19) முதல் விடுபட்டவர்களுக்கு ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் எனவும், மறுஅறிவிப்பு வரும் வரை பொங்கல் பரிசு விநியோகம் தொடரும் என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

News January 17, 2026

ஊருக்கே ஊற்றிக் கொடுத்த திமுக அரசு: நயினார்

image

பொங்கல் பண்டிகையில் ₹518 கோடிக்கு மது விற்பனையானதை சுட்டிக்காட்டி, உழவர் திருநாளன்று கூட உறுத்தாமல் ஊருக்கே ஊற்றிக் கொடுத்துள்ளது அறிவாலய அரசு என்று நயினார் விமர்சித்துள்ளார். பொங்கலுக்கு ₹3000 கொடுக்கிறோம் என ஊரெல்லாம் தம்பட்டம் அடித்துவிட்டு, அந்தப் பணத்தை டாஸ்மாக் வாயிலாக வசூலித்துள்ளது திமுக அரசு என சாடிய அவர், இதுபோன்ற ஒரு அரசு இனி தப்பித்தவறி கூட தமிழகத்தை ஆளக்கூடாது எனத் தெரிவித்துள்ளார்.

News January 17, 2026

பாம்பை வைத்து பொங்கல்.. தமிழ்நாட்டில் விநோதம்

image

காஞ்சிபுரம், சாத்தணஞ்சேரியில் இருளர் மக்கள் நல்ல பாம்பை பிடித்து பொங்கல் வைக்கும் பழக்கத்தை கடைப்பிடித்து வருகின்றனர். பொங்கலுக்கு 4 நாள்களுக்கு முன்பே பாம்பை பிடித்து, பானையில் அடைத்து வைத்து அதற்கு பூஜை செய்கின்றனர். பின்னர் காணும் பொங்கல் அன்று கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு பாம்பை எடுத்துச் சென்று, கற்பூர ஆரத்தி காட்டி வீட்டு வாசலில் படம் எடுக்கச் செய்யும் விநோத வழிபாடு நடந்து வருகிறது.

error: Content is protected !!