News October 21, 2025
போலீஸ்காரர்களுக்கு PM மோடியின் ராயல் சல்யூட்!

இந்தியாவில் பணியின்போது வீர மரணமடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ’காவலர் வீரவணக்க நாள்’ அக்.21-ல் அனுசரிக்கப்படுகிறது. இதுகுறித்து பதிவிட்ட PM மோடி, காவல் துறையினரின் தைரியத்தையும் கடமையுணர்வையும் வணங்குவதாக தெரிவித்துள்ளார். மேலும், நாட்டின் பாதுகாப்பிற்காக உயிர்நீத்த அவர்களின் உன்னத தியாகத்தை நினைவுகூர்வதாகவும், அவர்கள் காட்டும் அர்ப்பணிப்புக்கு நன்றி எனவும் பதிவிட்டுள்ளார்.
Similar News
News October 21, 2025
BIG NEWS: கனமழை.. CM ஸ்டாலின் உத்தரவு

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு CM ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்வதற்கு முன்னுரிமை கொடுக்கவும், நிவாரண முகாம்கள் அமைத்து குடிநீர், உணவு ஏற்பாடு செய்யவும் அறிவுறுத்தியுள்ளார். மழை பெய்தாலும் நெல் கொள்முதல் பணிகள் தொடர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
News October 21, 2025
ரயில்வே வேலை, 5810 காலி பணியிடங்கள்; APPLY

ரயில்வேயில் Ticket Supervisor, Station Master, Goods Train Manager, Junior Account Assistant – Typist, Senior Clerk – Typist, Traffic Assistant ஆகிய பதவிகளுக்கு 5810 காலி பணியிடங்கள் உள்ளன. இதற்கு, ₹25,500 – ₹35,400 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. ஏதோ ஒரு டிகிரியை முடித்திருந்தாலே போதும். 33 வயதுக்குட்பட்டவர்கள் நவ.20-க்குள் <
News October 21, 2025
நாட்டிலேயே தமிழகத்தில் அதிக MBBS இடங்கள்

இந்தியாவில் MBBS இடங்களின் எண்ணிக்கை 1,37,600 ஆக உயர்ந்துள்ளது. அரசு மருத்துவ கல்லூரிகளில் 73,300 இடங்களும், தனியாரில் 64,300 இடங்களும் உள்ளன. அதிகபட்சமாக தமிழகத்தில் 11,825 மருத்துவ இடங்கள் உள்ளன. அடுத்தடுத்த இடங்களில் கர்நாடகா – 11,695, உ.பி., – 11,250 என இருக்கின்றன. இந்த மருத்துவ இடங்களின் அதிகரிப்பால், 1,000 பேருக்கு 1 டாக்டர் என்ற WHO பரிந்துரைத்த நிலையை வேகமாக அடைய உதவும் என நம்பப்படுகிறது.