News August 15, 2025
2 ஹெலிகாப்டர்களிலிருந்து PM மோடிக்கு மலர் தூவப்படவுள்ளன

இந்தியாவின் 79-வது சுதந்திரதினம் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு PM மோடி உரையாற்றயுள்ளார். இதற்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. விழாவில் பிரதமர் மோடி கொடியேற்றும் போது 2 ஹெலிகாப்டர்கள் மூலம் மலர்கள் தூவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 5,000 பேர் சிறப்பு அழைப்பாளர்களாக விழாவில் பங்கேற்கவுள்ளனர்.
Similar News
News March 5, 2026
சற்றுமுன்: விலை கணிசமாக குறைந்தது

கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. ₹100-க்கு 5 கிலோ வரை வெங்காயம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தக்காளிக்கும் இதே நிலைமைதான். மேலும், பீட்ரூட்(கிலோ ₹30), உருளைக் கிழங்கு (கிலோ ₹15), சுரைக்காய் (கிலோ ₹35) உள்ளிட்டவையும் விலை குறைந்துள்ளது. இதேபோல், திருச்சி, மதுரை உள்ளிட்ட நகரங்களிலும் காய்கறி விலை வீழ்ச்சியை சந்தித்துள்ளது. உங்க ஏரியாவில் விலை எப்படி இருக்கிறது?
News March 5, 2026
பட்டா, சிட்டா ஆவணம்.. தமிழக அரசு புதிய அறிவிப்பு

பட்டா, சிட்டா, FMB ஆகியவற்றை ஒன்றாக பெறும் வகையில், ஒருங்கிணைந்த நில ஆவணம் வழங்கும் சேவையை TN அரசு தொடங்கியுள்ளது. eservices.tn.gov.in இணையதளத்தில் நிலம் சார்ந்த மாவட்டம், வட்டம், கிராமம் உள்ளிட்ட விவரங்களை உள்ளீடு செய்து ஒருங்கிணைந்த ஆவணத்தை டவுன்லோடு செய்து கொள்ளலாம். மேலும், நிலத்தின் உரிமை மாற்ற வரலாற்றை தெரிந்துகொள்ள உதவும் பட்டா மாறுதல் அறிக்கை சேவையும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. SHARE IT
News March 5, 2026
திமுக – காங்கிரஸில் இன்னும் இந்த சிக்கல் இருக்குதா?

திமுக-காங்., இடையே ஏற்பட்டிருக்கும் கூட்டணி உடன்பாடு வெறும் பேப்பரில் மட்டுமே இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இவ்வளவு நாள் தவெகவுடன் காங்., திரைமறைவில் பேச்சுவார்த்தை நடத்தியதே அதற்கு காரணம் என்கின்றனர். இதனால், காங்கிரஸ் மீது திமுகவுக்கு நம்பிக்கை குறைந்திருக்கலாம் எனவும் இதனால் இந்த கூட்டணி அடுத்துவரும் தேர்தல்களில் கைகோர்க்குமா என்பது சந்தேகமே என கூறி வருகின்றனர்.


