News October 16, 2025
மக்களுக்காக மனமுருகி பிரார்த்தனை செய்த PM மோடி

பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க PM மோடி ஆந்திராவிற்கு சென்றுள்ளார். இதனிடையே ஸ்ரீசைலத்தில் உள்ள ஸ்ரீ மல்லிகார்ஜுன சுவாமி வர்ல தேவஸ்தானத்தில் மோடி வழிபாடு செய்தார். வேஷ்டியுடன் கோயிலுக்கு வந்த அவர் மனமுருகி சாமி தரிசனம் செய்தார். இந்திய மக்களின் ஆரோக்கியத்துக்காக பிரார்த்தனை செய்ததாக மோடி தனது X தளத்தில் குறிப்பிட்டுள்ளார். அவரின் சாமி தரிசன போட்டோஸை மேலே SWIPE செய்து பாருங்கள்.
Similar News
News October 16, 2025
ஃபாக்ஸ்கானில் 14 ஆயிரம் பேருக்கு வேலை: TRB ராஜா

தமிழகத்தில் ஃபாக்ஸ்கான் நிச்சயமாக ₹15 ஆயிரம் கோடி முதலீடு செய்யும், இதன் மூலம் 14 ஆயிரம் பொறியாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என பேரவையில் TRB ராஜா உறுதியளித்துள்ளார். ஃபாக்ஸ்கான் விவகாரம் சந்தேகத்தை ஏற்படுத்திய நிலையில், மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கன்வர்ஷன் ரேட் 77% ஆக உள்ளது என தெரிவித்தார். கூகுள் ஆந்திராவில் முதலீடு செய்ததில் அதானியின் தலையீடு உள்ளது என்றும் அவர் கூறினார்.
News October 16, 2025
பண்டிகைகளுக்கு CM வாழ்த்து சொல்லாதது ஏன்?

எதிர்க்கட்சியில் இருப்பவர்களுக்கு CM பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் போது, பண்டிகைக்கும் வாழ்த்து தெரிவிக்கலாமே என வானதி சட்டப்பேரவையில் கேட்டார். இதற்கு, வாழ்த்து சொல்வது அவர்களுடைய நிலைப்பாடு என சேகர்பாபு பதில் அளித்தார். பிளவுவாதத்தை நாடு முழுவதும் பரப்புபவர்கள், குறிப்பிட்ட திருவிழாக்களுக்கு வாழ்த்து சொல்லவில்லை என ஏங்குவது, ஆடு நனைகிறதே என ஓநாய் கவலைப்படுவதற்கு ஒப்பாகும் எனவும் சாடினார்.
News October 16, 2025
குஜராத்தில் 16 அமைச்சர்கள் ராஜினாமா

குஜராத்தை ஆளும் பாஜக அரசின் 16 அமைச்சர்களும் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். அவர்கள் தங்கள் ராஜினாமா கடிதங்களை CM பூபேந்திர படேலிடம் கொடுத்துள்ளனர். இதையடுத்து நாளை புதிய அமைச்சர்கள் பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக CM பூபேந்திர படேல், இன்றிரவு ஆளுநரை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். புதிய அமைச்சரவையில் இளைஞர்கள், பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.