News February 10, 2025
மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார் PM மோடி
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739139344709_785-normal-WIFI.webp)
தேர்வு எழுத உள்ள மாணவர்களை PM மோடி நேரடியாக சந்தித்து கலந்துரையாடும் பரிக்ஷா பே சர்ச்சா என்ற நிகழ்வு இன்று டெல்லியில் நடைபெற உள்ளது. 2018ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்ட இந்த நிகழ்வின் 8வது ஆண்டு நிகழ்ச்சி இந்தாண்டு 8 பிரிவுகளாக நடத்தப்படுகிறது. தேர்வை எதிர்கொள்வது எப்படி, தேர்வு பயத்தை போக்குவது, கனவுகளை நினைவாக்க ஊக்குவிப்பது உள்ளிட்ட வகையில், 2,500 மாணவர்களுடன் மோடி கலந்துரையாட உள்ளார்.
Similar News
News February 10, 2025
வேங்கைவயலில் 21 விசிகவினர் கைது
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_92022/1662720797697-normal-WIFI.webp)
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்திற்குள் நுழைய முயன்ற விசிகவினர் 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிபிசிஐடி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த நாளிலிருந்து வேங்கைவயலுக்குள் வெளியாட்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விசிகவினர் சிலர் இன்று காவல்துறையின் அனுமதியின்றி உள்ளே நுழைய முயன்றதால் தடுத்து நிறுத்தி கைது செய்யப்பட்டனர்.
News February 10, 2025
இரவில் நடுத்தெருவில் நின்ற பெண் ஊழியர்கள்
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739189431160_347-normal-WIFI.webp)
மைசூரு இன்போசிஸ் நிறுவனத்தில், 400 பயிற்சி ஊழியர்கள் திடீரென நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, பிப்.7-ம் தேதி மாலை 7 மணிக்கு, பெண் ஊழியர்களை உடனே ஹாஸ்டலை விட்டு வெளியேற வேண்டுமென உத்தரவிட்டுள்ளனர். ‘இந்த நேரத்தில் எப்படி போவது, இன்றிரவு மட்டும் தங்கவிடுங்கள்’ என்று பெண்கள் கெஞ்சியும், ‘அதெல்லாம் எங்களுக்கு தெரியாது. நீங்கள் இப்போது நிறுவன ஊழியர்கள் கிடையாது’ என்று கூறி விரட்டினார்களாம்.
News February 10, 2025
பள்ளியிலேயே மாணவி பலி
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_92022/1662720705137-normal-WIFI.webp)
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே அரசுப் பள்ளியில் மாணவி ஒருவர் மைதானத்திலேயே மயங்கி விழுந்தார். இதனைக் கவனித்த ஆசிரியர்கள் அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லும் வழியில் மாணவி உயிரிழந்தார். மேலும், இரண்டு மாணவிகள் இதேபோல் மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாணவி உயிரிழந்தது ஏன் என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.