News April 25, 2025
நாட்டை தலைநிமிரச் செய்தவர்: பிரதமர் மோடி இரங்கல்

நாட்டின் அறிவியல், கல்விப் பயணத்தில் மிக முக்கிய பங்காற்றியவர் என்று குறிப்பிட்டு இஸ்ரோ ex.தலைவர் கஸ்தூரிரங்கன் மறைவுக்கு PM மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், தொலைநோக்கு கொண்ட அவரின் தலைமை, தன்னலமற்ற சேவையை நாடு என்றும் மறக்காது; இந்திய விண்வெளி அமைப்பை உலக அரங்கில் உயரச் செய்தவர் எனவும் புகழ்ந்த பிரதமர், அன்னாரின் குடும்பத்தினர், விஞ்ஞானிகள் அனைவருக்கும் ஆறுதலை தெரிவித்துள்ளார்.
Similar News
News April 26, 2025
அதிமுக கூட்டணியில் மேலும் சில புதிய கட்சிகள்: இபிஎஸ்

அதிமுக கூட்டணியில் மேலும் சில புதிய கட்சிகள் இணையக்கூடும் என்று இபிஎஸ் கூறியுள்ளார். சென்னை ராயப்பேட்டையில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது. இதில் பேசிய இபிஎஸ், பாஜகவுடன் தற்போது அதிமுக கூட்டணி அமைத்து இருப்பதாகவும், இக்கூட்டணியில் மேலும் சில கட்சிகள் சேர்ந்து மெகா கூட்டணி அமையும் என்றும் கூறினார். ஆனால் அக்கட்சிகள் பெயரை அவர் கூறவில்லை. எந்த கட்சிகள் சேரும்? உங்கள் கருத்து என்ன?
News April 26, 2025
உல்லாசத்துக்கு இடையூறு: பெண் குழந்தை கொலை

நெல்லையில் உல்லாசத்துக்கு இடையூறாக இருந்த குழந்தையை கொன்ற தாய், 3 காதலர்களை போலீஸ் கைது செய்தது. மகாதேவன்குளத்தை சேர்ந்த பிருந்தாவுக்கு திருமணமாகி 2 வயதில் பெண் குழந்தை இருந்தது. பிருந்தாவுடன், லிங்கசெல்வன், முத்துசுடர், பெஞ்சமின் உல்லாசமாக இருந்தபோது குழந்தை தண்ணீர் கேட்கவே, அடித்து கொலை செய்து, கீழே விழுந்து இறந்ததாக பிருந்தா, காதலர்கள் நாடகமாடியது தெரிந்ததால் கைது செய்யப்பட்டனர்.
News April 26, 2025
ஹாலிவுட் நடிகை மரணம்… காரணம் தெரிந்தது

ஹாலிவுட் நடிகை லார் பார்க் லிங்கன் (63) மறைவுக்கு புற்றுநோயே காரணம் என்று அவரின் மகள் தெரிவித்துள்ளார். த்ரில்லர் படங்களான Friday the 13th Part VII: The New Blood, “House II: The Second Story” உள்ளிட்டவற்றில் நடித்தவர் லார் பார்க் லிங்கன். அண்மையில் அவர் மரணம் அடைந்தார். அதற்கான காரணம் தெரியாமல் இருந்தது. இந்நிலையில், மார்பக புற்றுநோய் பாதிப்பே காரணம் என்று மகள் பைபர் லிங்கன் கூறியுள்ளார்.