News September 11, 2025

கத்தார் மீதான தாக்குதலுக்கு PM மோடி கண்டனம்

image

கத்தார் அரசர் தமீம் பின் ஹமாத்துடன் PM மோடி இன்று தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, கத்தார் தலைநகர் தாஹாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலை கண்டித்த அவர், இந்த தாக்குதல் ஆழ்ந்த கவலை அளிப்பதாக கூறினார். மேலும், பேச்சுவார்த்தைகள் மூலம் பிரச்னைகளை தீர்ப்பதற்கு இந்தியா ஆதரவளிப்பதாகவும் உறுதியளித்தார். முன்னதாக, ஹமாஸ் உயர்மட்ட தலைவர்களை குறிவைத்து தாஹாவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.

Similar News

News September 11, 2025

7,000 கைதிகள் தப்பினர்

image

நேபாளத்தில் சுமார் 7 ஆயிரம் கைதிகள் சிறைகளில் இருந்து தப்பியுள்ளனர். அரசுக்கு எதிராக இளைஞர்கள் நடத்திய போராட்டத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி பல சிறைகளில் இருந்து 7 ஆயிரம் கைதிகள் தப்பியுள்ளனர். அதில் சிலர் இந்தியாவிற்குள் ஊடுருவ முயற்சி செய்திருக்கின்றனர். உ.பி எல்லையில் 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு ராணுவம் அதிகாரத்தை கையிலெடுத்துள்ளதால் இயல்பு நிலை திரும்புகிறது.

News September 11, 2025

ஜனாதிபதி ஆகி இருப்பேன்: ராமதாஸ்

image

தான் நினைத்திருந்தால் ஜனாதிபதி ஆகியிருக்க முடியும் என ராமதாஸ் கூறியுள்ளார். எல்லா பிரதமர்களும் தனது நண்பர்கள் என்றும் PM மோடி தமிழகம் வந்தால் தன்னை கட்டியணைத்துக் கொள்வார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். தனக்கு எந்த பதவியும் வேண்டாம் என குறிப்பிட்ட ராமதாஸ், தமிழக மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பது மட்டுமே தனது நோக்கம் என்றார்.

News September 11, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல். ▶அதிகாரம்: சிற்றினஞ்சேராமை. ▶குறள் எண்: 455 ▶குறள்: மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும் இனந்தூய்மை தூவா வரும். ▶பொருள்: மனத்தூய்மை, செய்யும் செயல் சிறப்பு ஆகிய இரண்டும், ஒருவன் சேர்ந்துள்ள இனத்தின் தூய்மையை ஆதாரமாகக் கொண்டே பிறக்கும்.

error: Content is protected !!