News April 29, 2025

PM கிஷான் 20-வது தவணை ஜூன் மாதம் வழங்க முடிவு!

image

மத்திய அரசின் ‘PM கிஷான்’ உதவித்தொகையின் 20-வது தவணை ஜூன் மாதம் வழங்கப்படவுள்ளது. இத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 9.8 கோடி விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர். 19-வது தவணை ₹2000 கடந்த பிப்.24-ம் தேதி பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வழங்கப்பட்ட நிலையில், 20-வது தவணையை ஜூன் மாதம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. 18-வது தவணை அக்டோபரிலும், 17-வது தவணை ஜூன் 2024லும் வழங்கப்பட்டது.

Similar News

News April 29, 2025

அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

image

தமிழகத்தில் இரவு 10 மணி வரை நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி & கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று IMD அறிவித்துள்ளது. மேலும், வேலூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

News April 29, 2025

IPL: இளம் வீரர் முதல் வயதான வீரர் வரை

image

நடப்பு ஐபிஎல் தொடரின் இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷி (14), வெறும் 35 பந்துகளில் சதம் அடித்து அசத்தியிருக்கிறார். அதேநேரம், அதிக வயது கொண்ட வீரரான தோனியும் (43) CSK அணியில் தனது ஆற்றலை நிரூபித்து வருகிறார். இவர்கள் இருவருக்குள்ளும் இருக்கும் 29 ஆண்டுகால வயது வித்தியாசம் ரசிகர்களால் ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது. வேறு எந்த விளையாட்டிலும் இப்படி ஒரு வயது வித்தியாசத்தை பார்க்க முடியாது.

News April 29, 2025

IPL: KKR முதலில் பேட்டிங்

image

டெல்லியில் நடைபெறவிருக்கும் இன்றைய IPL போட்டியில், DC – KKR அணிகள் மோதவுள்ளன. இதற்கான டாஸில் வெற்றி பெற்று, முதலில் பவுலிங் செய்ய தீர்மானித்துள்ளார் DC கேப்டன் அக்சர் படேல். தற்போதைய நிலவரப்படி, புள்ளிப்பட்டியலில் DC 4-வது இடத்திலும், KKR 7-வது இடத்திலும் உள்ளன. இப்போட்டியில் வெற்றி பெற்றால் DC அணி முதலிடத்தை பிடிப்பதற்கான வாய்ப்பு உள்ளது. யார் வெல்வார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

error: Content is protected !!