News January 20, 2026
PM KISAN திட்ட தொகையை உயர்த்த மத்திய அரசு திட்டம்!

நலிவடைந்த விவசாயிகளுக்கு PM KISAN திட்டத்தில் மத்திய அரசு ஆண்டுக்கு 3 தவணைகளாக தலா ₹2,000 (ஆண்டுக்கு ₹6,000) வழங்கி வருகிறது. அதனை ஆண்டுக்கு ₹8,000 ஆக உயர்த்த அரசு திட்டமிட்டு வருவதாக முதலில் தகவல் வெளியானது. தற்போது, ₹9,000 வரை உயர்த்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. பிப்.1-ல் தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட்டில் PM KISAN திட்ட தவணைத் தொகையை உயர்த்தும் அறிவிப்பு வெளியாகலாம்.
Similar News
News February 4, 2026
BLOCK செய்த காதலன்.. குத்திக் கொன்ற காதலி

சத்தீஸ்கரை சேர்ந்த கம்தா பிரசாத், ரோஷினி இன்ஸ்டாவில் அறிமுகமாகி காதலித்து வந்துள்ளனர். சமீபத்தில் சர்ச்சை ஏற்படவே, வாட்ஸ் ஆஃப்-ல் ரோஷினியை கம்தா பிரசாத் ப்ளாக் செய்துள்ளார். வேறு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவரது வீட்டிற்கு ரோஷினி கத்தியுடன் சென்றுள்ளார். அப்போது வாக்குவாதம் முற்றிட, ஆத்திரமடைந்த ரோஷினி கத்தியால் குத்தியதில் கமதா பிரசாத் துடிதுடித்து உயிரிழந்தார்.
News February 4, 2026
வக்கீலாக மாறும் CM மம்தா பானர்ஜி

மேற்கு வங்கத்தில் மேற்கொள்ளப்பட்ட SIR பணிகளின் அடிப்படையில் 58 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இது பாஜகவின் சதி என சாடும் அம்மாநில CM மம்தா பானர்ஜி, சுப்ரீம் கோர்ட்டில் SIR மற்றும் ECI-க்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில், அவரே நேரில் ஆஜராகி வாதாடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சுப்ரீம் கோர்ட் வரலாற்றில் சிட்டிங் CM ஒருவர் வழக்கில் வாதாட இருப்பது இதுவே முதல்முறையாகும்.
News February 4, 2026
அப்துல்கலாம் பொன்மொழிகள்!

*ஒரு தேசம் ஊழலில்லாமலும், அறிவாளிகளின் தேசமாகவும் இருக்க மூன்று பேரால் மட்டுமே மாற்றத்தை ஏற்படுத்த முடியும். தந்தை, தாய், ஆசிரியர்தான் அந்த மூன்று பேர் *தேசம் என்பது எந்தவொரு தனிமனிதனுக்கும், நிறுவனத்துக்கும், கட்சிக்கும் அப்பாற்பட்டது *ஒரு தேசத்தின் மகுடமே அதன் சிந்தனையாளர்கள்தான் *தோல்விகளை எதிர்கொள்ள கற்றுக் கொள்ளுங்கள். அதுதான் வெற்றிக்கான மிக முக்கியமான திறமை.


