News February 2, 2026
PM KISAN திட்டத்தின் நிதி ₹10,000?.. CLARITY

PM KISAN திட்டத்தின் கீழ், நலிவடைந்த விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 3 தவணைகளாக மத்திய அரசு ₹6,000 வழங்கி வருகிறது. இந்த தொகையை ₹10,000 ஆக உயர்த்துமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், இதுதொடர்பாக பட்ஜெட்டில் அறிவிப்பு இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட நிலையில், அப்படி எதுவும் இடம்பெறவில்லை. இத்திட்டத்தின் 22-வது தவணைத் தொகை (₹6,000) இந்த வாரத்திற்குள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.
Similar News
News February 9, 2026
தவெக கூட்டணி: நேரில் சந்திக்கிறார் செங்கோட்டையன்

அன்புமணி இருக்கக்கூடிய அதிமுகவுடனும், திருமா இருக்கக்கூடிய திமுகவுடன் கூட்டணி வைக்க முடியாத சூழலில் ராமதாஸ் சிக்கி தவித்து வருகிறார். இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, ராமதாஸை தவெக கூட்டணியில் இணைக்க செங்கோட்டையன் முயற்சித்து வருகிறாராம். இன்னும் ஓரிரு நாள்களில் ராமதாஸை நேரில் சந்தித்து கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கவிருக்கும் KAS, 10 தொகுதிகள் வரை ஒதுக்க ஓகே சொல்லவிருப்பதாகவும் கூறப்படுகிறது.
News February 9, 2026
திமுக ஆட்சியில் கோவை புறக்கணிப்பு: எஸ்.பி.வேலுமணி

கோவையில் தெருமுனை பிரசாரத்தை துவக்கிவைத்த பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அதிமுக ஆட்சிக்கு வந்ததும் கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டம் கொண்டுவரப்படும் என்று உறுதியளித்தார். கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் கோவை புறக்கணிக்கப்பட்டதாக குற்றம் சாட்டிய அவர், எந்த திட்டத்தையும் கொண்டுவரவும் இல்லை, கொண்டு வர நிதியையும் ஒதுக்கவில்லை. ஆனால், விளம்பரம் மட்டும் திமுக செய்வதாக விமர்சித்தார்.
News February 9, 2026
கம்யூ., சித்தாந்தத்தில் இருந்து இந்தியா விடுபட வேண்டும்:

நக்சலைட்டுகள் தங்களது ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடைந்தால் அரசிடம் இருந்து உதவிகள் கிடைக்கும் என்று அமித்ஷா தெரிவித்துள்ளார். கம்யூனிஸ்டுகள் எங்கெல்லாம் ஆட்சியில் இருந்தார்களோ, அங்கெல்லாம் அவர்களால் வளர்ச்சியை கொண்டுவர முடியவில்லை. கம்யூனிச சித்தாந்தம் அழிவைக் குறிக்கும் ஒரு சித்தாந்தமாகும். எனவே, அழிவுகரமான கம்யூனிச சித்தாந்தத்தில் இருந்து இந்தியா விடுபட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


