News September 5, 2025
ஐரோப்பிய தலைவர்களை இந்தியாவிற்கு அழைத்த PM

ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அண்டோனியோ கோஸ்டா மற்றும் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான்டெர் லேயெனுடன் PM மோடி தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தினார். வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு உறவுகள் மேம்பட்டதை தலைவர்கள் வரவேற்றனர். உக்ரைனில் அமைதியை நிலைநாட்டுவது குறித்த கருத்துகளை பரிமாறிக்கொண்டனர். மேலும், அந்த 2 ஐரோப்பிய தலைவர்களை இந்தியாவிற்கு வருமாறு PM மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
Similar News
News March 17, 2026
புதுகை: BE/B.tech முடித்தால் வங்கி வேலை!

செண்ட்ரல் பேங் ஆப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள சிறப்பு அலுவலர்கள் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு பொதுத்துறை நிறுவன வேலை
2. பணியிடங்கள்: 275
3. வயது: 18 வயது பூர்த்தியடந்தவர்
4. சம்பளம்: ரூ.48,000
5. கல்வித் தகுதி: B.E., / B.tech.,
6. கடைசி தேதி: 23.03.2026
7. மேலும் அறிய: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News March 17, 2026
ஸ்டாலினுக்கு அழுத்தம் கொடுக்கும் கூட்டணி கட்சிகள்!

தேமுதிகவுக்கு எத்தனை சீட்டு என்பதை சொன்ன பிறகு தங்களை அழையுங்கள் என திமுக தலைமைக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் கூறியுள்ளனவாம். இதனால், திமுக தொகுதிப் பங்கீட்டு குழுவினர் கடும் அதிர்ச்சியை அடைந்துள்ளனர். ஏற்கெனவே காங்கிரஸுக்கு கூடுதல் சீட்டு ஒதுக்கியதால் தங்களுக்கும் கூடுதல் சீட்டுகள் வேண்டும் என CPI, CPM, VCK, ஸ்டாலினுக்கு கடும் நெருக்கடியை கொடுத்து வருவதால் தொகுதி உடன்பாட்டில் இழுபறி நீடிக்கிறது.
News March 17, 2026
FLASH: காருடன் எரிந்த நிலையில் கிடந்த 4 சடலங்கள்!

நெல்லை, திசையன்விளை பகுதியில் உள்ள பனங்காட்டில் சொகுசு கார் ஒன்றில் எரிந்த நிலையில், 4 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடல்களை கைப்பற்றிய போலீசார் மோப்ப நாய்கள், தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் விசாரணையில் இறங்கியுள்ளனர். நள்ளிரவில் நடந்த இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.


