News April 17, 2025
PM இன்டர்ன்ஷிப் திட்டம்: இன்னும் 5 நாள்கள் அவகாசம்

PM இன்டர்ன்ஷிப் திட்டத்திற்கு விண்ணப்பிக்க இன்னும் 5 நாள்கள் மத்திய அரசு அவகாசம் அளித்துள்ளது. PM இன்டர்ன்ஷிப் திட்டத்தின்கீழ் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து படித்த இளைஞர்களைத் தேர்வு செய்து மாதம் ரூ.5,000, ஒருமுறை ரூ.6,000 மத்திய அரசு அளிக்கிறது. இந்தத் திட்டத்தில் சேருவதற்கான கால அவகாசம் கடந்த 15-ம் தேதியுடன் முடிவடைய இருந்தது. எனினும், அந்த அவகாசத்தை 22ம் தேதி வரை அரசு நீடித்துள்ளது.
Similar News
News October 28, 2025
திமுக ஆட்சி வீட்டுக்கு செல்வது உறுதி: விஜய்

விவசாயிகளின் நெல் மூட்டைகளை உரிய நேரத்தில் கொள்முதல் செய்யாமல் அவற்றை மழையில் நனையவிட்டு வீணாக்கிய திமுக அரசு வீட்டுக்கு செல்வது உறுதி என விஜய் அதிரடி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். கரூரில் 41 பேர் பலியான சம்பவத்திற்கு பிறகு அரசியல் ரீதியாக எவ்வித அறிக்கை, அறிவிப்புகளையும் வெளியிடாமல் இருந்த அவர், நேற்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து பேசிய நிலையில், மீண்டும் அரசியல் பணிகளை தொடங்கியுள்ளார்.
News October 28, 2025
மருத்துவ சின்னங்களில் ஏன் பாம்பு உள்ளது தெரியுமா?

உலகளவில் மருத்துவ சின்னங்களில் பாம்பு இடம்பெற்றிருக்கும். WHO-வின் Logo-விலும் பாம்பு இருப்பதை நம்மால், பார்க்க முடியும். ஆனால், பாம்புக்கும், மருத்துவத்துக்கும் என்ன சம்பந்தம் என தெரியுமா? கிரேக்க புராணங்களின் படி, மருத்துவ தெய்வமான அஸ்கிளேபியஸ்(Asclepius) கையில் பாம்பு சுற்றிய தடியை (Rod of Asclepius) வைத்திருந்தார். அதன் வெளிப்பாடாகவே மருத்துவ சின்னங்களில் பாம்பு இடம்பெறுவதாக கூறப்படுகிறது.
News October 28, 2025
BREAKING: தவெகவில் அதிரடி மாற்றம்.. விஜய் எடுத்த முடிவு

தவெகவில் அமைப்பு ரீதியாக பல்வேறு மாற்றங்களை செய்ய விஜய் திட்டமிட்டுள்ளார். தான் செய்ய உள்ள மாற்றங்களுக்கு உடனடியாக நிர்வாகிகளிடம் ஒப்புதல் பெற அடுத்த வாரம் அவசர பொதுக்குழுவை கூட்டுகிறார். இது, சென்னை (அ) மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக கரூரில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பாகவும், கட்சியின் அடுத்தகட்ட பணிகள் குறித்தும் இக்கூட்டத்தில் அவர் ஆலோசனை நடத்த உள்ளார்.


