News April 17, 2025
PM இன்டர்ன்ஷிப் திட்டம்: இன்னும் 5 நாள்கள் அவகாசம்

PM இன்டர்ன்ஷிப் திட்டத்திற்கு விண்ணப்பிக்க இன்னும் 5 நாள்கள் மத்திய அரசு அவகாசம் அளித்துள்ளது. PM இன்டர்ன்ஷிப் திட்டத்தின்கீழ் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து படித்த இளைஞர்களைத் தேர்வு செய்து மாதம் ரூ.5,000, ஒருமுறை ரூ.6,000 மத்திய அரசு அளிக்கிறது. இந்தத் திட்டத்தில் சேருவதற்கான கால அவகாசம் கடந்த 15-ம் தேதியுடன் முடிவடைய இருந்தது. எனினும், அந்த அவகாசத்தை 22ம் தேதி வரை அரசு நீடித்துள்ளது.
Similar News
News November 23, 2025
ஏலியனுடன் பேசினாரா USA முன்னாள் அதிபர் புஷ்?

ஏலியன்கள் பற்றி தொடர்ந்து விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், சமீபத்தில் வெளியான ‘The Age of Disclosure’ ஆவணப்படம் மேலும் ஒரு புயலை கிளப்பியுள்ளது. அதில், முன்னாள் USA அதிபர் ஜார்ஜ் HW புஷ்-க்கு ஏலியன்கள் பற்றி தெரியும் என்று விண்வெளி இயற்பியலாளர் எரிக் டேவிஸ் தெரிவித்துள்ளார். 3 UFO விண்கலங்கள் பூமிக்கு வந்ததாகவும், ஏலியன்கள் CIA-வை தொடர்பு கொண்டதாகவும் புஷ் கூறியதாக டேவிஸ் குறிப்பிட்டுள்ளார்.
News November 23, 2025
ஏண்டா தவெகவை தொட்டோம் என ஃபீல் பண்ணுவீங்க: விஜய்

2026-ல் தவெக நிச்சயம் ஆட்சியமைக்கும் என்று விஜய் நம்பிக்கை தெரிவித்துள்ளார். குறி வைத்தால் தவறாது; தவறும் என்றால் குறி வைக்க மாட்டேன் என்று எம்ஜிஆர் வசனத்தை சுட்டிக்காட்டினர். மேலும், இந்த எம்ஜிஆர் வசனம் யாருக்கு என்று புரிய வேண்டியவர்களுக்கு புரியும் என திமுகவை சீண்டிய அவர், ஏண்டா விஜய்யை தொட்டோம்; விஜய்யுடன் இருப்பவர்களை தொட்டோம் என நினைக்கும் நிலை வரும் என்றும் எச்சரித்தார்.
News November 23, 2025
தற்குறி அல்ல, TN அரசியலை மாற்றப்போகும் அறிகுறி: விஜய்

தவெக தொண்டர்களை, GenZ கிட்ஸ்களை தற்குறிகள் என திமுகவினர் அழைப்பதாக விஜய் கூறியுள்ளார். மக்கள் அனைவரும் தற்குறிகளா என கேள்வி எழுப்பிய அவர், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு நீங்கள் காட்டும் மரியாதையும் நன்றியும் இதுதானா எனவும் கேட்டுள்ளார். மேலும், மக்கள் தற்குறி அல்ல தமிழகத்தின் ஆச்சரியக்குரி எனவும் அரசியலை மாற்றப்போகும் அறிகுறி எனவும் அவர் உணர்ச்சி பொங்க பேசினார்.


