News April 4, 2025
பாலிவுட் நடிகர் மனோஜ் குமார் மறைவுக்கு பிரதமர் இரங்கல்

பிரபல பாலிவுட் நடிகர் மனோஜ் குமார் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இந்திய சினிமாவின் முக்கிய சின்னமாக இருந்தவர் எனவும் தனது தேசபக்தி ஆர்வத்தினை திரைப்படங்களில் பிரதிபலித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த உன்னத கலைஞர் எனவும் புகழாரம் சூட்டியுள்ளார். மறைந்த நடிகர் மனோஜ் குமார், பாஜகவில் இணைந்து பணியாற்றி வந்தது கவனிக்கத்தக்கது.
Similar News
News April 10, 2025
ஒலிம்பிக் கிரிக்கெட் பார்க்க ரெடியா?

அமெரிக்காவின் லாஸ்-ஏஞ்சலஸ் நகரில் 2028ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் தொடரில் கிரிக்கெட் போட்டிகளும் விளையாடப்படவுள்ளன. டி20 ஃபார்மேட்டில் நடைபெறவிருக்கும் இப்போட்டிகளில், 6 அணிகள் பங்கேற்கும் என்று ஒலிம்பிக் கமிட்டி அறிவித்துள்ளது. எந்த 6 அணிகள் விளையாடவுள்ளன, எங்கு போட்டிகள் நடைபெறவுள்ளன போன்றவை பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
News April 10, 2025
மின்னல் தாக்கி 13 பேர் பலியான சோகம்!

பிஹாரில் மின்னல் தாக்கியதில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கடந்த சில தினங்களாக பிஹாரில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனிடையே, நேற்று பெகுசராய், தர்பங்கா, மதுபானி, சமஸ்பூர் பகுதிகளில் மின்னல் தாக்கி 13 பேர் உயிரிழந்த நிலையில், 4 பேர் ஹாஸ்பிடலில் சிகிச்சையில் உள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள CM நிதிஷ்குமார், தலா ₹4 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.
News April 10, 2025
அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை சீருடை கொடுப்பனவு!

7 ஆண்டுகளுக்கு பிறகு மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை சீருடை கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. இதனால் ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஊழியர் பணியில் சேர்ந்த மாதத்தை கணக்கிட்டு நிதியாண்டில் அவருக்கு சேர வேண்டிய தொகை ஜனவரி, ஜூலை மாதங்களில் வழங்கப்படவுள்ளது. 7-வது ஊதியக்குழு பரிந்துரையின்படி பெரும்பாலான மத்திய அரசின் பெரும்பாலான துறை ஊழியர்கள் சீருடை கொடுப்பனவாக ₹20,000 பெறுகின்றனர்.