News April 14, 2025
PM ஆவாஸ் யோஜனா: 2.72 கோடி புதிய வீடுகள் தயார்

PM ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் புதிதாக 2.72 கோடி வீடுகள் கட்டித் தயார் நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கிராமங்களில் 3.79 கோடி புதிய வீடுகள் கட்ட மத்திய அரசு இலக்கு நிர்ணயித்திருந்தது. இந்நிலையில் கடந்த மார்ச் மாத நிலவரப்படி கிராமங்களில் புதிதாக 2.72 கோடி புதிய வீடுகள் கட்டப்பட்டு இருப்பதாகவும், ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் 72% முடிந்து விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News December 4, 2025
புயல் அலர்ட் 20 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்

சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட வட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், கடலூர், கோவை, கள்ளக்குறிச்சி, அரியலூர், திருவாரூர், தஞ்சை, விழுப்புரம், சிவகங்கை மாவட்டங்களில் இரவு 7 மணி வரை கனமழை பெய்வதற்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. செங்கை, சேலம், நெல்லை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும் IMD கணித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்த நிலையிலும் மழை பெய்து வருகிறது.
News December 4, 2025
மோடி அரசே ரூபாய் மதிப்பு குறைவுக்கு காரணம்: கார்கே

மத்திய அரசின் கொள்கைகளே ரூபாயின் மதிப்பு குறைந்ததற்கு காரணம் என மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டியுள்ளார். மோடி அரசின் திட்டங்கள் சரியானதாக இருந்தால் ரூபாயின் மதிப்பு சரிந்திருக்காது எனவும் அவர் சாடியுள்ளார். 2014-ல் குஜராத் CM-ஆக இருந்த மோடி, ரூபாய் மதிப்பு குறைந்ததற்கு காங்கிரஸை குற்றம்சாட்டியதை சுட்டிக்காட்டி, இப்போது நீங்கள்தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும் என PM-யிடம் கார்கே கேட்டுள்ளார்.
News December 4, 2025
சற்றுமுன்: Ex ஆளுநர் காலமானார்

மறைந்த முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான சுஷ்மா ஸ்வராஜின் கணவர் ஸ்வராஜ் கவுஷல் (73) இன்று காலமானார். மூத்த வழக்கறிஞரான ஸ்வராஜ், மிசோரம் மாநில முன்னாள் கவர்னர் ஆவார். இவரது மறைவுக்கு பாஜக உள்பட பல கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும், ஸ்வராஜ் கவுஷல், தனது கடின உழைப்பால் நாட்டிற்கு நிகரில்லா பணிகளை செய்துள்ளார் என பாஜக புகழஞ்சலி செலுத்தியுள்ளது.


