News January 26, 2026
PM மோடியும்.. குடியரசு தின டர்பனும்!

ஒவ்வொரு ஆண்டும் PM மோடி, குடியரசு தின விழாவில் பங்கேற்கும் போது, அவரின் தலைப்பாகை(டர்பன்) தனி கவனம் பெறுகிறது. ராஜஸ்தானி தலைப்பாகை அணிவதை வழக்கமாக கொண்டுள்ள அவர், அதன் நிறத்தை மட்டும் ஒவ்வொரு ஆண்டும் மாற்றுகிறார். 5 மீட்டர் துணியில் தயாரிக்கப்படும் இந்த தலைப்பாகை சுயமரியாதையின் அடையாளமாக கருதப்படுகிறது. 2015- 2026 வரை PM மோடி அணிந்த தலைப்பாகைகளை மேலே அடுத்தடுத்த படங்களில் கொடுத்துள்ளோம்.
Similar News
News February 7, 2026
ஒரேநாளில் தலைகீழாக மாறிய வெள்ளி விலை

தங்கத்தை போன்றே வெள்ளி விலையும் இன்று (பிப்.7) உயர்ந்துள்ளது. 1 கிராம் வெள்ளி ₹5 உயர்ந்து ₹285-க்கும் 1 கிலோ வெள்ளி ₹5,000 அதிகரித்து ₹2.85 லட்சத்துக்கும் விற்பனையாகிறது. கடந்த 2 நாள்களில் கிலோவுக்கு ₹40,000 குறைந்த வெள்ளி விலை இன்று அப்படியே தலைகீழாக அதிகரித்துள்ளது. இது நகைப் பிரியர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தாலும், தங்கம், வெள்ளியில் முதலீடு செய்தவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
News February 7, 2026
‘₹’ குறியீடு எப்படி உருவானது தெரியுமா?

ரூபாயின் குறியீடு எப்படி உருவானது என தெரியுமா? தேவநாகரி எழுத்து “र” (ra) மற்றும் நேர்கோடு இல்லாத லத்தீன் எழுத்து ‘R’ ஆகியவற்றின் கலவை இது. தேவநாகரி என்பது சமஸ்கிருதம், ஹிந்தி, மராத்தி போன்ற இந்திய மொழிகளை எழுதப் பயன்படுத்தப்படும் எழுத்து முறை. இந்த குறியீடு ஜூலை 15, 2010-ல் இந்திய அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதனை திருச்சியை சேர்ந்த உதய குமார் என்பவர் வடிவமைத்தார். SHARE.
News February 7, 2026
பார்லி.,யில் பாஜகவினர் கத்திட்டே இருக்காங்க: TR பாலு

நாடாளுமன்றம் நடக்கிறது என சொன்னாலே சிரிப்பாக வருகிறது என MP டி.ஆர்.பாலு கூறியுள்ளார். நாடாளுமன்றம் முறையாக நடப்பதில்லை என்ற அவர், ஒரு கருத்தை முன்வைக்க எழும்போதே, பாஜகவினர் கத்துவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், நாடாளுமன்றத்தில் நடக்கும் நிகழ்ச்சிகள் இந்தியாவின் 140 கோடி பேருக்கும் தலைகுனிவு என மக்கள் நினைப்பதாகவும் பேசியுள்ளார்.


