News April 19, 2024
தயவு செய்து ஓட்டு போடுங்கள்

மக்களவைத் தேர்தலில் வாக்காளர்கள் தயவு செய்து ஓட்டுப் போட வேண்டுமென்று நடிகர் பிரபு வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை தி.நகரில் உள்ள வாக்குச்சாவடியில் வரிசையில் காத்திருந்து பிரபு தனது வாக்கைப் பதிவு செய்தார். இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தேர்தலில் வாக்களிப்பது அனைவரின் ஜனநாயகக் கடமை என்றும், அதனால் தயவு செய்து அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
Similar News
News November 16, 2025
ஐசக் நியூட்டன் பொன்மொழிகள்

*ஒரு எளிய உண்மையைக் கண்டறிவதற்கு பல ஆண்டுகள் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். *நமக்குத் தெரிந்தவை ஒரு துளி அளவு, நமக்குத் தெரியாதவை ஒரு கடல் அளவு. *ஒவ்வொரு வினைக்கும், அதற்கு சமமான எதிர்வினை உண்டு. *மேலே சென்றால் கட்டாயம் கீழே வர வேண்டும். *நான் எப்போதாவது மதிப்புமிக்க கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியிருந்தால், அது வேறு எந்த திறமையையும் விட அதிக பொறுமையாக கவனித்ததே காரணம்.
News November 16, 2025
TN SIR: 26,000 குடும்பங்களுக்கு பெரிய சிக்கல்

தமிழகத்தில் SIR காரணமாக சென்னை, பெரும்பாக்கம் காலனியில் 26,000 குடும்பங்கள் வாக்குரிமையை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வீடு இல்லாதவர்கள், இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்டவர்கள், தமிழக அரசு மறுவாழ்வு திட்டத்தின் கீழ் இங்கு குடியமர்த்தப்பட்டுள்ளனர். இந்த மக்களுக்கு முறையான முகவரியும், அதற்கான ஆவணங்களும் இல்லை. இதனால், அவர்களின் வாக்குரிமை உறுதி செய்வதில் பிரச்னை ஏற்பட்டுள்ளது.
News November 16, 2025
போதைப்பொருள் விவகாரத்தில் அடிபடும் ‘காஞ்சனா 4’ நாயகி

மும்பை போலீஸ் சமீபத்தில் போதைப்பொருள் கடத்தல் கும்பலை பிடித்தது. அதில் ‘காஞ்சனா 4’ நாயகி நோரா பதேகி பெயர் அடிப்பட்டது. ஆனால், இதில் தனக்கு சம்மந்தம் இல்லை என அவர் விளக்கம் அளித்துள்ளார். நான் பார்ட்டிக்கு போவதில்லை, வேலை செய்யவே நேரம் சரியாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், நியூஸ்களின் வியூவ்ஸ்களுக்காக தனது பெயரை பயன்படுத்தினால், விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளார்.


