News March 26, 2024
அடுத்தவர் குடும்பத்தை தயவு செய்து கெடுக்க வேண்டாம்

புகழுக்காகவும் பணத்திற்காகவும் அடுத்தவர் குடும்பத்தைப் பற்றி பேச வேண்டாம் என மதுரை முத்துவின் மனைவி நீத்து தெரிவித்துள்ளார். “ஒவ்வொரு திரைப் பிரபலங்களின் வாழ்விலும் சொல்ல முடியாத பல பிரச்னைகள் உண்டு. நானும், முத்துவும் சந்தோஷமாக இருக்கிறோம். எங்கள் கலையை ரசியுங்கள். எங்கள் வீட்டு ஜன்னலை எட்டி பார்க்காதீர்கள்” என்று கூறியுள்ளார். முன்னதாக நீத்துவை பற்றி சிலர் தவறான தகவல்களை பரப்பி இருந்தனர்.
Similar News
News December 8, 2025
மீண்டும் ஒரு சயின்ஸ் ஃபிக்சன் படத்தில் SK

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கும் புதிய படத்தின் ஷூட்டிங் வரும் பிப்ரவரிக்குள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக முன் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருவதாக கூறப்படுகிறது. ‘அயலான்’ படத்தை தொடர்ந்து இந்த படமும் சயின்ஸ் ஃபிக்ஷன் ஜானரில் உருவாவதால், பெருமளவு கிராஃபிக்ஸ் பணிகள் இருக்கிறதாம். அதனால், US-ஐ சேர்ந்த பிரபல நிறுவனம் இப்படத்தில் இணைந்துள்ளதாம்.
News December 8, 2025
வள்ளலார் பொன்மொழிகள்

*உண்மையை சொல் அது உனது மரியாதையை பாதுகாக்கும். *சோதனைகள் தான் ஒரு மனிதனுக்கு அவனை அறிமுகப்படுத்துகின்றன. *ஒரு விளக்கு இன்னொரு விளக்கை ஏற்றுவதன் மூலம் எதையும் இழந்து விடாது. அந்த இடத்தில் ஒளி 2 மடங்காகும். அது போல நாம் பிறருக்கு உதவுவதால், நாம் பெறும் இன்பம் 2 மடங்காகும். *உண்டியலில் காணிக்கை செலுத்துவதற்கு பதில் பசியில் இருப்போருக்கு வயிறார உணவு கொடுங்கள். அதுவே கடவுளுக்கு மகிழ்ச்சி கொடுக்கும்.
News December 8, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: செங்கோன்மை ▶குறள் எண்: 543 ▶குறள்: அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நின்றது மன்னவன் கோல். ▶பொருள்: ஓர் அரசின் செங்கோன்மைதான் அறவோர் நூல்களுக்கும் அறவழிச் செயல்களுக்கும் அடிப்படையாக அமையும்.


