News August 26, 2024

‘பேர்வெல்’க்கு தகுதியான வீரர்கள்

image

இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து மூத்த வீரர்கள் ஓய்வை அறிவிக்கும்போது அவர்களுக்கு பிரியாவிடை (பேர்வெல்) கொடுப்பது வழக்கம். ஆனால், சில வீரர்கள் பிரியாவிடை நிகழ்ச்சியின்றியே தங்கள் ஓய்வை அறிவித்துள்ளனர். குறிப்பாக சேவாக், யுவராஜ், கம்பீர், தவான், ஜாஹீர் கான், ஹர்பஜன், தோனி ஆகியோர் பிரியாவிடை நிகழ்ச்சியின்றி வெளியேறினர். இவர்களில் உங்களுக்கு பிடித்தமான வீரர் யார்?

Similar News

News March 5, 2026

வான்கடேவில் தோனி-சாக்‌ஷி தம்பதி!

image

விறுவிறுப்பாக நடந்து வரும் இந்தியா – இங்கிலாந்து இடையேயான அரையிறுதி போட்டியை Ex. கேப்டன் தோனி தனது மனைவி சாக்‌ஷியுடன் கண்டுகளிக்கும் வீடியோ SM-ல் வைரலாகி வருகிறது. அர்ஜூன் டெண்டுல்கர் திருமணத்தில் இருவரும் பங்கேற்ற நிலையில் ஜோடியாக வான்கடேவுக்கு சென்றுள்ளனர். அதே போன்று ரோகித் சர்மா உள்ளிட்ட பிரபலங்களும் போட்டியை நேரில் கண்டு ரசித்து வருகின்றனர்.

News March 5, 2026

நாளை பள்ளிகளுக்கு விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

image

சனிப் பெயர்ச்சியை முன்னிட்டு, திருநள்ளாறு கோயில் விசேஷம் காரணமாக காரைக்கால் மாவட்டத்திற்கு நாளை(மார்ச் 6) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இது பொருந்தாது. இதேபோல், திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு மார்ச் 9-ல் புதுக்கோட்டை, பகவதியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு மார்ச் 10-ல் குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையாகும். SHARE IT

News March 5, 2026

BREAKING: மே.வங்க கவர்னராகிறாரா R.N.ரவி?

image

தமிழக கவர்னர் R.N.ரவி, மே.வங்க மாநில கவர்னராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மே.வங்க CM மம்தா பானர்ஜி இதை தன் X-பதிவில் குறிப்பிட்டுள்ளார். அம்மாநில கவர்னராக இருந்துவரும் சி.வி.ஆனந்த போஸ் திடீர் ராஜினாமா செய்ததால், R.N.ரவி கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளதாக தன்னிடம் உள்துறை அமைச்சர் தெரிவித்ததாக மம்தா கூறியுள்ளார்.

error: Content is protected !!