News December 28, 2024
400 இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்த திட்டம்

தமிழகம் முழுவதும் 400 இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகக் கால்நடை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜனவரி முதல் மே மாதம் வரை ஜல்லிக்கட்டு நடைபெறும் எனவும், காவல்துறை, தீயணைப்புத்துறை, கால்நடைத்துறை, சுகாதாரத்துறை மேற்பார்வையில் கண்காணிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. 18 மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு, எருது விடுதல், மஞ்சு விரட்டு, வடமாடு என 4 பகுதிகளாக போட்டிகள் நடைபெறவுள்ளன.
Similar News
News March 11, 2026
சஞ்சு சாம்சனை அடுத்த கேப்டனாக்க வேண்டும்: கைஃப்

சூர்யகுமார் யாதவ் தனது கேப்டன் பதவியில் இருந்து விலகினால், அந்த இடத்தை சஞ்சு சாம்சனால் நிரப்ப முடியும் என Ex வீரர் முகம்மது கைஃப் கூறியுள்ளார். 35 வயதாகும் சூர்யகுமார் நீண்ட காலம் கேப்டனாக நீடிக்க முடியாது என ரசிகர்கள் மத்தியில் பேச்சு எழுந்துள்ளது. இந்நிலையில் 31 வயதான, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை பைனலுக்கு அழைத்து சென்ற சஞ்சு சாம்சன் அடுத்த இந்திய கேப்டனாக இருக்கலாம் என கைஃப் தெரிவித்துள்ளார்.
News March 11, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: இடுக்கண் அழியாமை ▶குறள் எண்: 629 ▶குறள்: இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள் துன்பம் உறுதல் இலன். ▶பொருள்: இன்பம் வரும் பொழுது அதற்காக ஆட்டம் போடாதவர்கள், துன்பம் வரும் பொழுதும் அதற்காக வாட்டம் கொள்ள மாட்டார்கள். இரண்டையும் ஒன்றுபோல் கருதும் உறுதிக்கு இது எடுத்துக்காட்டு.
News March 11, 2026
நம் குடும்பத்தை பிரித்தது திமுக தான்: அன்புமணி

கடந்த 6 மாதமாக நடப்பதை எல்லாம் தன்னால் வெளியே சொல்ல முடியாது என அன்புமணி வேதனையுடன் தெரிவித்துள்ளார். பல்லாவரத்தில் பேசிய அவர், நன்றாக இருந்த குடும்பத்தை பிரித்து இந்த நிலைமைக்கு கொண்டு வந்ததற்கு காரணமே கேடுகெட்ட திமுக தான் என்றார். பாமக என்ற நம் குடும்பத்திற்குள் திமுக குழப்பத்தை ஏற்படுத்தியது; வரும் தேர்தலில் உங்கள் கோபத்தை எல்லாம் இந்த தீயசக்தி திமுக மீது காண்பியுங்கள் எனவும் கூறியுள்ளார்.


