News April 23, 2025
பிரதமர் மோடி மீது தாக்குதல் நடத்த திட்டம்?

பிரதமர் மோடியின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. ஏப்.19-ம் தேதி ஜம்மு – காஷ்மீருக்கு மோடி பயணம் மேற்கொள்ள இருந்தார். ஆனால், அவரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கையால் கடைசி நேரத்தில் தனது பயணத்தை ரத்து செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான், நேற்று பஹல்காமில் தீவிரவாதிகள் கொடூர தாக்குதலை அரங்கேறியிருக்கின்றனர்.
Similar News
News November 23, 2025
பிரேசில் முன்னாள் அதிபர் கைது

பிரேசிலின் முன்னாள் அதிபர் போல்சனாரோ, அந்நாட்டு போலீஸால் இன்று கைது செய்யப்பட்டார். முன்னதாக, 2022 தேர்தல் தோல்வியை அடுத்து ஆட்சிக் கவிழ்ப்பு சதியில் ஈடுபட்ட வழக்கில் அவருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இதற்காக சிறை செல்ல சில நாள்களே இருக்கும் நிலையில், போலீஸ் அவரை கைது செய்துள்ளனர். இதனால் அந்நாட்டில் எதிர்க்கட்சிகளின் போராட்டம் தீவிரமடையும் எனக் கூறப்படுகிறது.
News November 23, 2025
நகைக் கடன்.. ஹேப்பி நியூஸ் வந்தது

தங்க நகைக் கடனை அதிகரிக்க ஸ்மால் பைனான்ஸ் நிறுவனங்களுக்கு RBI பச்சைக்கொடி காட்டியுள்ளது. தனிநபர், வீடு, வாகனம் போன்ற வங்கிக் கடன்களின் வளர்ச்சி சமநிலையில் உள்ளது. இதனால், குறைந்த வட்டியில் நகைக் கடன்களை வழங்க வங்கிகள் ஆர்வம் காட்டி வருகின்றன. தங்க நகைக் கடன் பாதுகாப்பானது என்பதால், கிராமப் புறங்களில் இந்த வசதிகள் இல்லாத கிளைகளிலும் இனி நகைக் கடன்களை வழங்க ஸ்மால் பைனான்ஸ்கள் தீவிரம் காட்டுகின்றன.
News November 23, 2025
உலகிற்கு புதிய ஐநா தேவை: ராஜ்நாத் சிங்

இஸ்ரேஸ்-ஹமாஸ், உக்ரைன்-ரஷ்யா போர் உள்ளிட்ட பல நெருக்கடி நிலைகளில், ஐநாவால் வலுவாக பங்காற்ற முடியவில்லை என்று ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக உலகிற்கு நிச்சயமாக ஒரு புதிய ஐநா அமைப்பு தேவை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், சர்வதேச சட்டங்களை மதித்து செயல்படும் நாடான இந்தியாவை பார்த்து பிறநாடுகள் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியிருப்பதாகவும் அவர் பேசியுள்ளார்.


