News November 17, 2024
கங்குவா மீது திட்டமிட்டு அவதூறு: ஜோதிகா குற்றச்சாட்டு

கங்குவா படத்தின் முதல் ஷோ முடியும் முன்பே எதிர்மறை விமர்சனங்களை பரப்பியதாக நடிகை ஜோதிகா வேதனை தெரிவித்துள்ளார். படத்தின் முதல் அரை மணி நேரம் சுமாராக இருந்ததாகக் கூறிய அவர், குறை இல்லாத படத்தை எடுக்க முடியாது எனவும், அதற்காக ஒட்டுமொத்த படத்தை விமர்சிப்பதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், பல குழுக்கள் திட்டமிட்டு இப்படத்திற்கு எதிரான பிரசாரங்களில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
Similar News
News March 5, 2026
பாரதியார் பொன்மொழிகள்

*ஏதும் அறியாமலிருப்பது அறியாமை இல்லை. கண்டதெற்கெல்லாம் கவலைப்பட்டுக்கொண்டு, காலத்தையும், வாழ்வையும் வீணாக்குவது தான் அறியாமை *எவனையும் வெற்றுக் காகிதம் என ஒருபோதும் எண்ணாதே. ஒருநாள் அவன் பட்டமாய் பறப்பான். நீயும் அவனை அண்ணாந்துதான் பார்க்க வேண்டும் *இவ்வுலக வாழ்க்கையில் சம்பாதித்து கொள்ளவேண்டிய குணங்கள் எல்லாவற்றிலும் மிகமிக உயர்ந்தது பொறுமை *கல்வியும் தவமும் எந்த பிராயத்திலும் தொடங்கலாம்.
News March 5, 2026
கமேனியின் இறுதிச்சடங்கு ஒத்திவைப்பு

போரில் கொல்லப்பட்ட கமேனியின் இறுதிச்சடங்கு நேற்று மாலை மஷாத் நகரில் உள்ள ரேசா புனித தளத்தில் நடைபெறும் என ஈரான் ஊடகங்கள் தெரிவித்தன. ஆனால், டெஹ்ரான் உள்ளிட்ட ஈரானின் முக்கிய நகரங்கள் மீதான தாக்குதல், வளைகுடா நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக கமேனியின் இறுதிச்சடங்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இறுதிச்சடங்கின் புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என ஈரான் அரசு கூறியுள்ளது.
News March 5, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: இடுக்கணழியாமை ▶குறள் எண்: 628 ▶குறள்:
இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்பம் உறுதல் இலன்.
▶பொருள்: இன்பத்தைத் தேடி அலையாமல், துன்பம் வந்தாலும் அதை இயல்பாகக் கருதிப்கொள்பவன் அந்தத் துன்பத்தினால் துவண்டு போவதில்லை.


