News February 9, 2025
கடலில் விழுந்து நொறுங்கிய விமானம்; 10 பேர் பலி
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739065662675_1241-normal-WIFI.webp)
அமெரிக்காவில் மாயமான பயணிகள் விமானம் கடலில் விழுந்து நொறுங்கியதில் 10 பேர் உடல் சிதறி பலியாகினர். கடந்த 6ஆம் தேதி அலாஸ்காவிலிருந்து ரோம் நகருக்கு புறப்பட்ட விமானம் 39 நிமிடங்களில் ரேடார் தொடர்பை இழந்தது. மாயமான விமானம் ரோம் நகரிலிருந்து 55 கி.மீ தொலைவில் கடல்பகுதியில் பனிப்பாறையில் நொறுங்கி விழுந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அமெரிக்காவில் கடந்த 10 நாட்களில் நிகழும் 3ஆவது விமான விபத்து இதுவாகும்.
Similar News
News February 10, 2025
தினமும் ஒரு பொன்மொழி!
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739122458354_785-normal-WIFI.webp)
✍சட்டப்பூர்வமாக சரியான சில விஷயங்கள், நியாய ரீதியாக பார்த்தால் சரியானவை அல்ல.✍எதிரிகளை அழிப்பதற்கான சிறந்த வழி அவர்களை நண்பர்களாக்குவதுதான்.✍ஒரு வாக்குச்சீட்டு தோட்டாவை விட வலிமையானது.✍உதவி செய்யும் இதயம் இருப்பவனுக்கே, விமர்சிக்க உரிமை உண்டு.✍எல்லோரையும் நம்புவது பயங்கரமானது; யாரையும் நம்பாமல் இருப்பது அதிபயங்கரமானது.✍ ஏமாற்றுவதைக் காட்டிலும், தோற்றுப்போவது மரியாதைக்குரியது – ஆபிரகாம் லிங்கன்.
News February 10, 2025
மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார் PM மோடி
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739139344709_785-normal-WIFI.webp)
தேர்வு எழுத உள்ள மாணவர்களை PM மோடி நேரடியாக சந்தித்து கலந்துரையாடும் பரிக்ஷா பே சர்ச்சா என்ற நிகழ்வு இன்று டெல்லியில் நடைபெற உள்ளது. 2018ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்ட இந்த நிகழ்வின் 8வது ஆண்டு நிகழ்ச்சி இந்தாண்டு 8 பிரிவுகளாக நடத்தப்படுகிறது. தேர்வை எதிர்கொள்வது எப்படி, தேர்வு பயத்தை போக்குவது, கனவுகளை நினைவாக்க ஊக்குவிப்பது உள்ளிட்ட வகையில், 2,500 மாணவர்களுடன் மோடி கலந்துரையாட உள்ளார்.
News February 10, 2025
உங்கள் குழந்தைகளுக்கு போன் கொடுக்கிறீர்களா?
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739125999512_785-normal-WIFI.webp)
குழந்தைகள் அழுகையை நிறுத்த செல்போனைக் கொடுக்கிறீர்களா? அப்படியானால், நீங்கள் அவர்களுக்கு தீங்கு செய்கிறீர்கள். குழந்தைகள் 6 மாதத்திலிருந்து தங்களைச் சுற்றியுள்ள சூழலைப் பார்த்து பேசக் கற்றுக்கொள்கிறார்கள். இவ்வயதில் அவர்களிடம் போன் கொடுப்பதால், 3 வயது வரை பேச முடியாமல் போகும் அபாயம் உள்ளது என்கின்றனர் மருத்துவர்கள். எதிர்காலத்தில் ஆட்டிசம் போன்ற பிரச்னைகள் வர வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கின்றனர்.