News December 4, 2024
இந்திரா காந்தியை போல் பாதலை கொல்லத் திட்டம்?

தங்கள் மதத்தை அவமதிப்பவர்களை சீக்கிய பற்றாளர்கள் மன்னிப்பதில்லை. இதுவே Ex PM இந்திரா படுகொலைக்கும் காரணமாக கூறப்பட்டது. சுக்பீர் சிங் பாதல் மீதான கொலை முயற்சியும் இதன் வெளிப்பாடு தான். பஞ்சாபில் SAD ஆட்சியில், சீக்கிய மதத்தை அவமதித்தவர்களுக்கு அன்றைய CM பாதல் மன்னிப்பு வழங்கியது தவறு என, பொற்கோயிலில் சேவை தண்டனை அளித்தது Akal Takht அமைப்பு. அதை நிறைவேற்றும் போது, அவரை கொல்ல முயற்சி நடந்துள்ளது.
Similar News
News December 4, 2025
ஆபாச புகைப்படம்.. கொந்தளித்த ரஷ்மிகா

AI பயன்படுத்தி பெண்களை ஆபாசமாக சித்தரிப்பவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என ரஷ்மிகா மந்தனா வலியுறுத்தியுள்ளார். AI-ல் உருவாக்கப்பட்ட ரஷ்மிகாவின் ஆபாச போட்டோ SM-ல் காட்டுத் தீ போல் பரவியது. இதுகுறித்து X-ல் அவர், AI என்பது முன்னேற்றத்திற்கான ஒரு சக்தி, ஆனால் அதை ஆபாசமான விஷயங்களை உருவாக்கவும், பெண்களை குறிவைத்து தாக்கவும் சிலர் பயன்படுத்துவதாகவும் கூறியுள்ளார்.
News December 4, 2025
அப்துல் கலாம் பொன்மொழிகள்!

*துன்பங்களை சந்திக்க தெரிந்தவனுக்கு தோல்வியே இல்லை *வெற்றி பெற வேண்டும் என்ற பதட்டம் இல்லாமல் இருப்பது தான் வெற்றி பெற சிறந்த வழி *சிக்கல்களை எதிர்கொள்ளும் போது கூடவே சில திறமைகளும் வெளிப்படுகின்றன *சிந்திக்கத் தெரிந்தவனுக்கு ஆலோசனைத் தேவையில்லை *ஒரு முறை வந்தால் அது கனவு, இரு முறை வந்தால் அது ஆசை, பல முறை வந்தால் அது இலட்சியம் *உலகம் உன்னை அறிவதற்கு முன் உன்னை உலகுக்கு அறிமுகம் செய்துகொள்
News December 4, 2025
அதிமுக கூட்டணியில் இணையும் அன்புமணி?

அதிமுக கூட்டணியில் இணைய அன்புமணி திட்டமிட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். தொடர்ச்சியாக திமுக அரசை சாடும் அன்புமணி, தேர்தல் கூட்டணி குறித்து அறிவிக்காமல் உள்ளார். இந்நிலையில், தான் நடத்தும் சாதிவாரி கணக்கெடுப்பு போராட்டத்தில் பங்கேற்க EPS-க்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார். இது கூட்டணிக்கான சமிக்ஞை ஆக கருதப்படுகிறது. எனினும் ராமதாஸுடனும் ADMK பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல்கள் பரவுகின்றன.


