News December 4, 2024
இந்திரா காந்தியை போல் பாதலை கொல்லத் திட்டம்?

தங்கள் மதத்தை அவமதிப்பவர்களை சீக்கிய பற்றாளர்கள் மன்னிப்பதில்லை. இதுவே Ex PM இந்திரா படுகொலைக்கும் காரணமாக கூறப்பட்டது. சுக்பீர் சிங் பாதல் மீதான கொலை முயற்சியும் இதன் வெளிப்பாடு தான். பஞ்சாபில் SAD ஆட்சியில், சீக்கிய மதத்தை அவமதித்தவர்களுக்கு அன்றைய CM பாதல் மன்னிப்பு வழங்கியது தவறு என, பொற்கோயிலில் சேவை தண்டனை அளித்தது Akal Takht அமைப்பு. அதை நிறைவேற்றும் போது, அவரை கொல்ல முயற்சி நடந்துள்ளது.
Similar News
News November 27, 2025
CINEMA 360°: காதலை தூண்டும் அனிருத்தின் ‘Pattuma’ பாடல்

*கோபிசந்த் மாலினேனி இயக்கும் பாலைய்யாவின் 111-வது படம் பூஜையுடன் தொடங்கியது. *சூர்யாவின் கருப்பு படத்தின் ஓடிடி உரிமம் நெட்பிளிக்ஸுக்கும், சாட்டிலைட் உரிமம் ஜீ5-க்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. *அனிருத் குரலில் LIK படத்தின் 2-வது பாடலான ‘Pattuma’ வெளியாகியுள்ளது. *நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ள லாக் டவுன் படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
News November 27, 2025
அக்னிவீர் பணியிடங்களை அதிகரிக்க முடிவு

2026-ம் ஆண்டுக்குள் அக்னிவீர் பணியிடங்களை ஆண்டுக்கு 1 லட்சமாக அதிகரிப்பது குறித்து ராணுவம் பரிசீலித்து வருகிறது. அக்னிபாத் திட்டம் தொடங்கப்பட்டு, 2022 முதல் ஒவ்வொரு ஆண்டும் தோராயமாக 40,000 வீரர்கள் பணி அமர்த்தப்படுகின்றனர். அதேவேளையில், ஒவ்வொரு ஆண்டும் ஓய்வு பெறும் வீரர்களின் எண்ணிக்கை 60,000 – 65,000 வரை உள்ளது. இந்த இடைவெளியை குறைக்கும் வகையில், பணியிடங்களை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
News November 27, 2025
BREAKING: டிச.5-ல் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம்

டிச.5-ம் தேதி (அடுத்த வெள்ளி) அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இதில், மாணவர்களின் கல்வித் தரம், பள்ளிகளில் அடிப்படை வசதிகள் உள்ளிட்டவற்றை மேம்படுத்துவது, மாணவர்களுக்கான அரசுத் திட்டங்களை எடுத்துரைப்பது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளன. ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொள்ளும் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம், மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை நடத்தப்படும்.


