News May 20, 2024
புதிதாக 2.30 லட்சம் பெண்களை சேர்க்க திட்டம்

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், புதிதாக 2.30 லட்சம் பெண்களை, தமிழக அரசு இணைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே இந்தத் திட்டத்தில், பயனாளிகளின் வங்கிக் கணக்கில் மாதந்தோறும் ₹1000 வரவு வைக்கப்படுகிறது. இந்த நிலையில், புதிய பயனாளர்களை இணைப்பதற்கான விண்ணப்பங்கள், ஜூன் மாதம் முதல் விநியோகிக்கப்படும் எனக் கூறியுள்ள திட்ட அதிகாரிகள், அதன் மூலம் புதிய பயனாளர்களை சேர்க்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
Similar News
News November 20, 2025
கனமழை: நாளை இங்கெல்லாம் மழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்து வரும் நிலையில், நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. மயிலாடுதுறை, கடலூர் ஆகிய டெல்டா மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக IMD தெரிவித்துள்ளது. இன்று நள்ளிரவு முதலே மழை பெய்யக்கூடும் என்பதால், நாளை பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்வோர் மறக்காமல் குடையை எடுத்துச் செல்லுங்கள்.
News November 19, 2025
12 பேரை திருமணம் செய்த பெண் (PHOTO)

போலீஸ் அதிகாரி உள்பட 12 பேரை திருமணம் செய்து ₹8 கோடி சுருட்டிய பெண் போலீசில் சிக்கியுள்ளார். உ.பி., கான்பூரை சேர்ந்த திவ்யான்ஷி செளத்ரி(30) ஆசிரியை என்ற போர்வையில் உலா வந்துள்ளார். Bank மேனேஜர்கள் 3 பேரை திருமணம் செய்துவிட்டு சிக்கியபோது, சில போலீசாருக்கு லஞ்சம் கொடுத்து எஸ்கேப் ஆகியுள்ளார். முன்பின் தெரியாத இதுபோன்ற பெண்களிடம் ஆண்கள் உஷாராக இருப்பது நல்லது என போலீசார் எச்சரிக்கின்றனர். உஷார்..!
News November 19, 2025
இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு குறைவு: கீர்த்தி

துபாய், USA நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு குறைவாக உள்ளதாக கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார். இந்த நிலை மாற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். ‘நடிகையர் திலகம்’ படத்திற்கு முன்புவரை ட்ரோல்களை தான் பார்த்ததே இல்லை என்ற அவர், இதைப் பற்றியெல்லாம் யோசிக்காமல் என் வேலையை நான் பார்த்துக்கொண்டே இருப்பேன் என்றும் கூறியுள்ளார். கீர்த்தியின் பேச்சுக்கு உங்கள் கருத்து என்ன?


