News April 25, 2024
104 நம்பிக்கை மையங்களை மூட திட்டம்

தமிழகத்தில் எச்.ஐ.வி தொற்று பாதிப்பு குறைந்த பகுதிகளில் செயல்பட்டு வரும் 104 நம்பிக்கை மையங்களை மூட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அந்த இடங்களில் செயல்பட்டு வந்த ஆரம்ப சுகாதார நிலையங்களில் எச்.ஐ.வி & பால்வினை நோய் பரிசோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழகம் முழுவதும் 2,163 நம்பிக்கை மையங்கள், 64 சிகிச்சை மையங்கள், 34 ஆற்றுப்படுத்துதல் மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
Similar News
News January 25, 2026
TOSS: இந்திய அணி பவுலிங்

நியூசிலாந்துக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. வருண் சக்கரவர்த்தி, அர்ஷ்தீப் சிங்கிற்கு பதில், பும்ரா மற்றும் ரவி பிஷ்னோய் அணியில் இணைந்துள்ளனர். 5 போட்டிகள் கொண்ட தொடரில் ஏற்கெனவே இந்தியா 2-0 என முன்னிலை பெற்றுள்ளது. கடந்த 2 போட்டிகளிலும் அதிரடி பேட்டிங் மூலம் மிரட்டிய இந்தியா, இன்றும் ஆதிக்கம் செலுத்தி தொடரை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News January 25, 2026
தங்கம் வைத்திருப்போருக்கு எச்சரிக்கை

2026-ல் புதிய விதிகளின்படி, நகைகளை தாமதமாக விற்றால் உங்களின் வரிச்சுமை அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதாவது, வாங்கிய தங்கத்தை 2 ஆண்டுகளுக்கு பின் விற்பனை செய்தால், அது நீண்ட கால மூலதன ஆதாயமாக கருதப்பட்டு 12.5% வரி விதிக்கப்படும். முன்பிருந்த இண்டெக்சேஷன் பலன் இப்போது கிடையாது. அதேநேரத்தில், 2 ஆண்டுகளுக்குள் தங்கத்தை விற்றால் குறுகிய கால முதலீடாக கருதி, வருமான வரி வரம்புப்படி வரி வசூலிக்கப்படும்.
News January 25, 2026
ரோஹித் சர்மா, ஹர்மன்பிரீத் கவுருக்கு பத்ம ஸ்ரீ விருது

இந்தியா அணியின் Ex., கேப்டனும், நட்சத்திர வீரருமான ரோஹித் சர்மாவுக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருதை அறிவித்துள்ளது. அதேபோல் மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டனான ஹர்மன் பிரீத் கவுருக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணிக்காக பல சாதனை படைத்த இருவருக்கும், கிடைத்துள்ளது இந்த அங்கீகாரத்துக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


