News July 29, 2024
அக்டோபர் 2ஆம் தேதி கட்சி தொடங்குகிறார் பி.கே

தேர்தல் வியூகவாதி பிரசாந்த் கிஷோர், அக்டோபர் 2ஆம் தேதி புதிய கட்சியை தொடங்கவிருப்பதாக அறிவித்துள்ளார். ஜன் சூரஜ் என்ற அமைப்பை நடத்தி வரும் அவர், காந்தி ஜெயந்தி அன்று அதனை கட்சியாக மாற்றி பிஹார் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட முடிவு செய்திருக்கிறார். முன்னதாக, இவர் 2021 தேர்தலில் திமுகவுக்கு வியூகம் வகுத்துக் கொடுத்தார். கட்சி தொடங்கியபின் அப்பணியை அவர் கைவிடப் போவதாகவும் தெரிகிறது.
Similar News
News December 4, 2025
13 ஆண்டுகளுக்கு பிறகு..

சையது முஷ்டாக் அலி தொடரின், Knock- Out சுற்றில் விளையாட ரோஹித் விருப்பம் தெரிவித்துள்ளாராம். அவர் கடைசியாக 2011-12 சீசனில் மும்பை அணிக்காக இத்தொடரில் விளையாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 2027 ODI WC-ல் விளையாட உடற்தகுதி & ஃபார்மை தக்கவைத்துக் கொள்ள, உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என ரோஹித் & கோலியிடம் BCCI அறிவுறுத்திய நிலையில், இருவரும் உள்ளூர் போட்டிகளில் விளையாடவுள்ளனர்.
News December 4, 2025
உங்க ஊரில் வேலை வேணுமா? Way2News-ல் பாருங்கள்!

Way2News ஆப், புதிதாக உள்ளூர் வேலைவாய்ப்புகள் பிரிவை அறிமுகம் செய்துள்ளது. இதில் உங்கள் ஊரில் உள்ள தொழிற்சாலை, அலுவலக, திறன்சார்ந்த மற்றும் டெலிவரி பாய் உள்பட அனைத்து வகை வேலைவாய்ப்புகளையும் தெரிந்துகொள்ளலாம். தகவல்கள் முழுவதும் சரிபார்க்கப்பட்டு உறுதி செய்யப்பட்டே வழங்கப்படுகின்றன. உங்களுக்கு அருகில் உள்ள வேலைவாய்ப்புகளை அறிய Way2News app-ல் உள்ள Jobs பிரிவில் பார்த்து பயனடையுங்கள்.
News December 4, 2025
வரலாறு காணாத சரிவு.. மிகப்பெரிய தாக்கம்

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, வரலாறு காணாத அளவில் வீழ்ச்சியடைந்து, ₹90.43 என்ற புதிய குறைந்தபட்ச நிலையை அடைந்துள்ளது. ரூபாய் மதிப்பு சரிவு, இந்திய பொருளாதாரம் & சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்ல, இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய பொருள்களின் விலை உயர வாய்ப்புள்ளது. இதனால், ரூபாயின் மதிப்பை நிலைநிறுத்த, RBI முக்கிய முடிவுகளை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


