News April 27, 2025
5 ஆண்டுகளுக்கு பின் தொடங்கும் புனித யாத்திரை

கைலாஷ் – மானசரோவர் யாத்திரை 5 ஆண்டுகளுக்கு பின் தொடங்க உள்ளது. வரும் ஜூன் – ஆகஸ்ட் வரை 750 பேரை, 15 பிரிவுகளாக அழைத்து செல்ல வெளியுறவு அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது. கடைசியாக கடந்த 2019-ல் இந்த யாத்திரை நடந்தது. கொரோனா மற்றும் 2020-ல் லடாக் எல்லையில் சீன மோதலால் யாத்திரை நிறுத்தப்பட்டது. மானசரோவர் ஏரி சீனாவின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட திபெத்தில் உள்ளது.
Similar News
News March 14, 2026
குற்றச் சமூகமாக மாறிவிட்டோம்: சீமான்

TN-ல் 6 வயது சிறுமி முதல் 60 வயது மூதாட்டி வரை யாருக்கும் பாதுகாப்பில்லை என சீமான் வேதனை தெரிவித்துள்ளார். திருச்சியில் பேசிய அவர், குற்றச் சமூகமாக மாறிவிட்டோம் எனவும், போதை தலைவிரித்தாடுவதே குற்றச் சம்பவங்களுக்கு காரணம் என்றும் கூறினார். குற்றச் சம்பவங்களில் ஆட்சியில் இருப்பவர்கள் மட்டுமல்ல, அதைத் தேர்வு செய்த மக்களுக்கும் பங்கு உள்ளதாக விமர்சனம் செய்துள்ளார். இதுபற்றி உங்கள் கருத்து என்ன?
News March 14, 2026
OPS அணியில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவி!

OPS அணியிலிருந்து மீண்டும் அதிமுகவுக்கு திரும்பியவர்களுக்கு, EPS முக்கிய பொறுப்பை வழங்கியுள்ளார். அந்த வகையில், ராஜ்யசபா MP தர்மர் மற்றும் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி இருவருக்கும் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், நேற்று அதிமுகவில் இணைந்த காளியம்மாளுக்கு மகளிர் அணியில் மாநில பொறுப்பு மற்றும் செய்தித் தொடர்பாளர் பொறுப்பு வழங்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
News March 14, 2026
TN அரசின் ₹20,000 மானியம்.. அப்ளை செய்வது எப்படி?

ஆன்லைன் டெலிவரி தொழிலாளர்கள் புதிதாக இ-ஸ்கூட்டர் வாங்க TN அரசு 20,000 வரை மானியம் வழங்குகிறது. இதனை பெற விரும்புவோர், அரசின் <


