News November 19, 2024

Photo: கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்

image

லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான இடங்களில் கடந்த 3 தினங்களாக நடந்த சோதனையில் ₹12.41 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், வரி ஏய்ப்பு தொடர்பான குற்ற ஆவணங்கள், டிஜிட்டல் சாதனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து, வங்கிகளில் உள்ள ₹6.42 கோடி டெபாசிட்டுகளும் முடக்கப்பட்டுள்ளது. தலை சுற்ற வைக்கும் வகையில் 500 ரூபாய் நோட்டுகளை மலைபோல் அடிக்கிவைக்கப்பட்ட போட்டோ வெளியாகியுள்ளது.

Similar News

News March 13, 2026

84 ஈரானிய மாலுமிகளின் உடல்கள் ஒப்படைப்பு

image

இந்திய பெருங்கடலில் சென்ற <<19303157>> ஈரான் போர் கப்பலை<<>> அமெரிக்கா தாக்கி மூழ்கடித்தது. இதில் 84 மாலுமிகள் உயிரிழந்த நிலையில், 32 பேர் இலங்கை கடற்படையால் பத்திரமாக மீட்கப்பட்டனர். 60 பேரின் நிலை பற்றி இதுவரை தெரியவில்லை. இந்நிலையில் 84 பேரின் உடல்களை ஈரான் தூதரகத்திடம் இலங்கை ஒப்படைத்துள்ளது. சிறப்பு விமானங்கள் மூலம் அவர்களின் உடல்கள் ஈரான் கொண்டு செல்லப்பட உள்ளன.

News March 13, 2026

கனிமொழியை மக்கள் விரட்டி அனுப்பியதே சாட்சி: EPS

image

தூத்துக்குடியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சிறுமியின் உறவினர்கள் திமுகவின் சாக்கு போக்குகளை நம்பத் தயாராக இல்லை என EPS சாடியுள்ளார். <<19370719>>கனிமொழியை <<>> அச்சிறுமியின் உறவினர்கள் விரட்டி அனுப்பியதே இதற்கு சாட்சி எனவும் கூறியுள்ளார். பெண்களின் பாதுகாப்பை நிர்கதியாக்கிய திமுக அரசுக்கு முடிவுரை கட்டப் போகும் மாபெரும் <<19364920>>போராட்டத்தை <<>> NDA கூட்டணி நடத்த உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

News March 13, 2026

சற்றுமுன்: மீண்டும் அதிமுகவில் இணைந்தார்

image

திமுகவில் OPS இணைந்ததை விரும்பாத அவரது ஆதரவாளர்கள் பலரும் அதிமுக, தவெகவுக்கு தாவி வருகின்றனர். இந்நிலையில், OPS-ன் ஆதரவாளராக இருந்த திருவையாறு Ex MLA MGM சுப்ரமணியன் மீண்டும் அதிமுகவுக்கு திரும்பியுள்ளார். சென்னையில் EPS-ஐ சந்தித்த அவர், தேர்தலில் அதிமுகவின் வெற்றிக்கு பாடுபடுவேன் என உறுதியளித்துள்ளார். ஆதரவாளர்களாக இருந்தவர்கள் தன்னை விட்டு பிரிந்து செல்வது OPS-க்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

error: Content is protected !!