News January 20, 2025
லாட்டரியில் வந்த போன்: ₹2.8 கோடி அபேஸ்!

சைபர் குற்றவாளிகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பெங்களூருவில் லாட்டரியில் போன் வென்றதாக, IT ஊழியருக்கு கொரியர் மூலம் போன் அனுப்பப்பட்டுள்ளது. அதனை உண்மை என நம்பி, புது போனில் Sim கார்டு போட்டு பயன்படுத்தியுள்ளார். தொடர்ந்து, போனில் உள்ள தகவல்களை கைப்பற்றிய குற்றவாளிகள், அவரது A/Cல் இருந்து ₹2.8 கோடியை சுருட்டியுள்ளனர். பின் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர் போலீஸை அணுகியுள்ளார்.
Similar News
News August 25, 2025
தங்கம் வாங்கும் போது இந்த விஷயங்களை கவனிங்க..!

உலகிலேயே தங்கம் நுகர்வில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. தங்கத்தின் விலை கூடினாலும் அதன் மீதான மவுசு குறையவில்லை. இந்நிலையில், நீங்கள் தங்கம் வாங்கும்போது இந்த விசயங்களை மறக்காம நோட் பண்ணுங்க. *BIS முத்திரையை கட்டாயம் பாருங்க. முக்கோண வடிவிலான இந்த முத்திரை இருந்தால் அது தரமான தங்கம். *Hallmark Unique Identification (HUID) கோடு, *<
News August 25, 2025
இந்தியாவுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி

கஜகஸ்தானில் நடைபெற்று வரும் ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு மற்றொரு தங்கம் கிடைத்துள்ளது. மகளிர் ட்ராப் ஷூட்டிங் இறுதிப்போட்டியில் நீரு தண்டா 43 முறை இலக்கை துல்லியமாக சுட்டு தங்க பதக்கத்தை வசப்படுத்தினார். இதே போட்டியில் இந்தியாவின் ஆஷிமா வெண்கலம் வென்றார். இதுவரை இந்தியா 28 தங்கம், 10 வெள்ளி, 12 வெண்கலம் என மொத்தம் 50 பதக்கங்களுடன் முதலிடத்தில் தொடர்கிறது.
News August 25, 2025
கட்சியில் இருந்து கூண்டோடு விலகல்

கரூரில் கட்சியில் இருந்து கூண்டோடு விலகியது தேமுதிகவில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட செயலாளர் <<17504956>>அரவை முத்து<<>>, அதிமுகவில் இணைந்த நிலையில், அவரோடு மாவட்ட முக்கிய நிர்வாகிகளும் இணைந்துள்ளனர். மாவட்ட அவை தலைவர் ரங்கநாதன், குளித்தலை நகரச் செயலாளர் சுப்பிரமணியன், அரவக்குறிச்சி ஒன்றிய செயலாளர் சின்னசாமி, கடவூர் ஒன்றிய செயலாளர் ஆல்வின் உள்ளிட்ட 200 பேர் அதிமுகவில் ஐக்கியமாகியுள்ளனர்.