News January 20, 2025
லாட்டரியில் வந்த போன்: ₹2.8 கோடி அபேஸ்!

சைபர் குற்றவாளிகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பெங்களூருவில் லாட்டரியில் போன் வென்றதாக, IT ஊழியருக்கு கொரியர் மூலம் போன் அனுப்பப்பட்டுள்ளது. அதனை உண்மை என நம்பி, புது போனில் Sim கார்டு போட்டு பயன்படுத்தியுள்ளார். தொடர்ந்து, போனில் உள்ள தகவல்களை கைப்பற்றிய குற்றவாளிகள், அவரது A/Cல் இருந்து ₹2.8 கோடியை சுருட்டியுள்ளனர். பின் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர் போலீஸை அணுகியுள்ளார்.
Similar News
News March 8, 2026
காமெடி நடிகர் கோரி பார்கர் காலமானார்.. குவியும் அஞ்சலி

‘Love Boat’, ‘Will & Grace’ உள்ளிட்ட பல தொடர்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்த பிரபல நடிகர் கோரி பார்க்கர்(60) காலமானார். நடிப்பு மட்டுமின்றி மேடை நாடகத்திலும் நகைச்சுவை வேடங்களில் அசத்தி வந்த கோரி பார்க்கர், புற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அண்மை காலமாக திரைப்பிரபலங்கள் பலரும் கேன்சர் பாதிப்பால் அடுத்தடுத்து உயிரிழந்து வருகின்றனர். So sad!
News March 8, 2026
காங்கிரசுக்காக தமிழகத்தை அடமானம் வைத்த திமுக

கூட்டணிக்குள் காங்கிரஸை தக்க வைக்க திமுக அரசு, தமிழக மக்கள் நலனை அடமானம் வைத்திருப்பதாக அண்ணாமலை விமர்சித்துள்ளார். காங்., – திமுக தொகுதி உடன்பாடு கையெழுத்தான மறுநாளே விவசாயிகளின் உயிர்நாடியான காவிரி ஆற்றின் குறுக்கே, மேகதாது அணை கட்ட, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக மாநில காங்., அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், இதனை CM ஸ்டாலின் ஏன் கண்டிக்கைவில்லை என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
News March 8, 2026
உலகப்போரையே நிறுத்திய பெண்கள்.. வரலாறு தெரியுமா?

புராணக் கதைகளால் போர் வெடிப்பதே பெண்களால்தான் என்ற தவறான புரிதல் சமூகத்தில் இருக்கிறது. ஆனால் உலகப்போரையே நிறுத்த பெண்கள் முக்கியப் பங்கு வகித்த வரலாற்றை பற்றி தெரியுமா? 8 மார்ச், 1917-ல் World War 1 போது பசி, பட்டினி, வறுமை இருந்தது. இதனை எதிர்த்து ஒன்று கூடிய பெண்கள் ‘Bread & Peace’ போராட்டத்தை ரஷ்யாவில் நடத்தினார்கள். 1918-ல் போர் நின்றதோடு, ரஷ்ய பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்தது.


