News February 26, 2025
8 மாவட்டங்களில் நாளை PF சிறப்பு முகாம்

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையம், 8 மாவட்டங்களில் நாளை சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், தி.மலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் புதுச்சேரி, காரைக்காலிலும் நாளை இந்த சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன. இந்த முகாம் நடைபெறும் இடங்களுக்கு சென்று உரிய விண்ணப்பத்தை பூர்த்தி செய்து PF பயனாளர்கள் பிரச்னைக்குத் தீர்வு காண முடியும்.
Similar News
News February 27, 2025
‘பெயர் சொல்லும் பிள்ளைகள் நீங்கள் தானே..’

உ.பி.யில் சண்டை ஒன்றில் பொய்யாக குற்றம்சாட்டப்பட்டு, அனில் கவுர் என்பவர் சிறையில் தவித்துள்ளார். தந்தையை காப்பாற்ற முடிவெடுத்த அவரின் பிள்ளைகள் ரிஷப், உபசனா இருவருமே சட்டம் பயின்று வக்கீலாக வழக்கில் ஆஜராகினர். அவர்களின் விடாமுயற்சி காரணமாக 11 ஆண்டுகள் கழித்து, அனில் விடுவிக்கப்பட்டுள்ளார். பாசத்திற்காக சட்டத்துடன் மோதி, அப்பாவைக் காப்பாற்றிய இவர்கள்தான் ‘உண்மையில் பெயர் சொல்லும் பிள்ளை ’!
News February 27, 2025
அடுத்த மகா கும்பமேளா எப்போது?

பிரயாக்ராஜ் நகரில் கடந்த 45 நாள்களாக நடைபெற்றுவந்த மகா கும்பமேளா இன்றோடு நிறைவு பெற்றது. இதனையடுத்து, 12 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் மகா கும்பமேளா 2037ஆம் ஆண்டு பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் நடைபெறும். இதற்கு முன்பாக, வரும் 2027ஆம் ஆண்டு நாசிக் நகரில் பூர்ண கும்பமேளா, 2033ஆம் ஆண்டு ஹரித்வாரில் மகா கும்பமேளா ஆகியவை நடைபெறவுள்ளன. நீங்கள் கும்பமேளாவில் புனித நீராடினீர்களா?
News February 27, 2025
கும்பமேளா நிறைவு: ஒரேநாளில் 1.4 கோடி பேர் நீராடல்

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள திரிவேணிசங்கமத்தில் 45 நாள்களாக நடைபெற்ற மகா கும்பமேளா, மகாசிவராத்திரியான இன்றுடன் நிறைவடைந்தது. நிறைவு நாளான இன்று மட்டும் 1.4 கோடி பேர் திரிவேணிசங்கமத்தில் புனித நீராடினர். இவர்களுடன் சேர்த்து மொத்தம் 66.21 கோடி பேர் புனித நீராடியுள்ளனர். இந்தத் தகவலை பகிர்ந்துள்ள உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், இதுவொரு உலக வரலாறு எனக் குறிப்பிட்டுள்ளார்.