News December 14, 2024
2025 ஜூன் முதல் ஏடிஎம்மில் பிஎப் பணம்

ஏடிஎம் இயந்திரத்தில் பிஎப் பணத்தை எடுக்கும் முறை வருகிற 2025ஆம் ஆண்டு ஜூன் மாதம் அமலுக்கு வரவுள்ளதாக புதுத் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது பிஎப் பணத்துக்கு விண்ணப்பித்து, வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்ட பிறகு எடுக்கப்பட்டு வருகிறது. இதற்குப் பதிலாக ஏடிஎம் இயந்திரத்தில் எடுக்கும் முறை அடுத்தாண்டு முதல் நடைமுறைக்கு வரவிருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.
Similar News
News September 15, 2025
BREAKING: இன்று முதல் மாதம் ₹2,000.. தமிழக அரசு அறிவிப்பு

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதந்தோறும் ₹2,000 வழங்கும் ‘அன்புக்கரங்கள்’ திட்டத்தை CM ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். 18 வயது நிறைவடையும் வரை இந்த உதவித்தொகை வழங்கப்படுவதோடு, அவர்களது உயர்கல்விக்கும் அரசு உதவி செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில், பெற்றோரை இழந்து உயர்கல்வியில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு லேப்டாப்களும் வழங்கப்படவுள்ளன.
News September 15, 2025
கழுத்து, முதுகுவலி நீங்க இந்த யோகாசனத்தை பண்ணுங்க!

கழுத்து, முதுகு வலி நீங்க பாசிமோட்டானாசனம் பண்ணுங்க.
☆தரையில் அமர்ந்து, கால்களை முன்னோக்கி நீட்டவும்.
☆கைகளை மேல்நோக்கி உயர்த்தி, குனிந்து கைகளால் பாதங்களைப் பிடிக்க முயற்சிக்கவும்.
☆முடிந்தவரை தலை, கால்களுக்கு அருகில் வரும்படி குனியவும். ஆனால் முதுகெலும்பை நேராக இருக்க வேண்டும்.
☆இந்தநிலையில், 15- 20 விநாடிகள் இருந்துவிட்டு மீண்டும் பழைய நிலைக்கு திரும்பவும். SHARE IT.
News September 15, 2025
எப்போதும் சரணடைய மாட்டோம்: UK PM ஸ்டார்மர்

குடியேற்றத்தை கண்டித்து லண்டனில் நேற்று 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் நடத்திய பேரணியில் வன்முறை வெடித்தது. இதை கண்டித்த அந்நாட்டு PM கெய்ர் ஸ்டார்மர், தேசிய கொடியை கேடயமாக பயன்படுத்தி வன்முறையில் ஈடுபடும் வலதுசாரிகளிடம் UK ஒருபோதும் சரணடையாது என தெரிவித்தார். மேலும், UK எப்போதும் பன்முகத்தன்மையை வலியுறுத்துவதாகவும், மக்களின் நிறத்தை வைத்து அடையாளப்படுத்துவதை ஏற்க முடியாது என்றும் கூறியுள்ளார்.