News April 19, 2025
PF ஏடிஎம் திட்டம் மே அல்லது ஜூனில் தொடக்கம்

PF பணத்தை எடுப்பதற்கு சில நேரங்களில் மிகுந்த சிரமத்தை மாத சம்பளதாரர்கள் அனுபவிக்கின்றனர். அவர்களின் துயரத்தை போக்கும் வகையில், புதிய திட்டத்தை EPF தயாரித்துள்ளது. இதன்கீழ், PF கணக்கில் உள்ள பணத்தை ஏடிஎம்மில் பயனாளர்கள் அவசரத் தேவைக்கு எடுக்க முடியும். இந்தத் திட்டத்தை வரும் மே மாத கடைசி (அ) ஜூனில் தொடங்க EPF திட்டமிட்டிருப்பதாக மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
Similar News
News November 12, 2025
நீண்ட ஆயுளுடன் வாழ இதை செய்யுங்க!

மாறிவரும் வாழ்க்கைச்சூழலில், நமது உடல் ஆரோக்கியம் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, நோய்களை தவிர்த்து உடல்நலத்தை பேண சில செயல்முறைகளை வேண்டியது அவசியமாகிறது. நம் முன்னோர்கள் பின்பற்றிய பழக்கவழக்கங்கள் நோய் நொடியின்றி நீண்ட ஆயுளுடன் வாழ வழிவகை செய்தன. அதனை தற்போது நகர்ப்புறங்களிலும் எளிதாக பின்பற்றலாம். அவற்றை மேலே Swipe செய்து தெரிந்து கொள்ளுங்கள்.
News November 12, 2025
இனி SMS-களுக்கும் கட்டணம்!

கோடாக் மகிந்திரா வங்கியில் மினிமம் பேலன்ஸாக ₹10,000 வைத்திருக்க வேண்டும். அதை பராமரிக்காமல் இருந்தால், மாதத்திற்கு 30 SMS மட்டுமே இலவசம் என அந்த வங்கி அறிவித்துள்ளது. 30 SMS-களுக்கு பிறகு, ஒரு SMS-க்கு ₹0.15 வசூலிக்கப்படும் என தெரிவித்துள்ளது. வரும் டிச.7 முதல் இது நடைமுறைக்கு வர உள்ளது. UPI, ATM, செக் டெபாசிட், டெபிட், கிரெடிட் கார்ட் பரிவர்த்தனை என அனைத்து SMS-களுக்கும் இது பொருந்தும்.
News November 12, 2025
2026 தேர்தல்: முஸ்லிம் ஜமாத்துகள் எடுத்த முடிவு

யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் 2026-ல் திமுக தான் ஆட்சி அமைக்கும் என IUML தலைவர் காதர் மொய்தீன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள 8,000 முஸ்லிம் ஜமாத்துக்கள் திமுகவிற்கு வாக்களிக்க முடிவு செய்துவிட்டனர். ஜமாத்தில் இருப்பவர்கள் வெவ்வேறு கட்சிகளில் இருந்தாலும், திமுகவிற்குதான் வாக்களிப்பார்கள். SIR விவகாரத்தில் CM ஸ்டாலின் இந்தியாவிற்கே வழிகாட்டியாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.


