News April 19, 2025
PF ஏடிஎம் திட்டம் மே அல்லது ஜூனில் தொடக்கம்

PF பணத்தை எடுப்பதற்கு சில நேரங்களில் மிகுந்த சிரமத்தை மாத சம்பளதாரர்கள் அனுபவிக்கின்றனர். அவர்களின் துயரத்தை போக்கும் வகையில், புதிய திட்டத்தை EPF தயாரித்துள்ளது. இதன்கீழ், PF கணக்கில் உள்ள பணத்தை ஏடிஎம்மில் பயனாளர்கள் அவசரத் தேவைக்கு எடுக்க முடியும். இந்தத் திட்டத்தை வரும் மே மாத கடைசி (அ) ஜூனில் தொடங்க EPF திட்டமிட்டிருப்பதாக மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
Similar News
News November 23, 2025
லண்டனில் ஓர் தமிழரின் சாதனை பயணம்!

அதிமுகவில் வட்ட செயலாளராக இருந்த ஒருவர் தற்போது லண்டனில் உள்ள கிரேடன் நகராட்சியின் துணை மேயர் என்றால் நம்ப முடிகிறதா. 1991-ல் வில்லிவாக்கத்தில் வட்ட செயலாளராக இருந்த தாமோதரன், படிப்புக்காக லண்டன் சென்று அங்கேயே செட்டில் ஆகி இந்த நிலையை அடைந்துள்ளார். அண்மையில், லண்டன் சென்ற CM ஸ்டாலினை அவர் சந்தித்தார். விரைவில் இங்கிலாந்து பார்லிமென்ட்டில் நுழைய உள்ளதாகவும் கூறப்படுகிறது. வாழ்த்துக்கள் சார்!
News November 23, 2025
எல்லைகளை ஆக்கிரமிக்கும் நாடுகளுக்கு வார்னிங்!

எந்தவொரு நாடும் தனது வலிமை (அ) அச்சுறுத்தல்களை பயன்படுத்தி, பிறநாட்டின் பகுதிகளை ஆக்கிரமிக்க கூடாது என்ற கூட்டு பிரகடனத்தை ஜி20 நாடுகள் ஏற்றுக்கொண்டன. இது ரஷ்யா, இஸ்ரேல், மியான்மருக்கான மறைமுக எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது. அதேபோல், நேற்றைய உச்சிமாநாட்டில், பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் கண்டித்தன. மேலும், பசியின்மை, பாலின பாகுபாட்டை களையவும் அறைகூவல் விடுத்துள்ளன.
News November 23, 2025
மது, Fast Food-க்கு தடை, மீறினால் ₹1 லட்சம் அபராதம்

திருமணம் போன்ற நிகழ்வுகளில் மது, Fast Food உள்ளிட்டவை சர்வசாதாரணமாக மாறிவிட்டது. இந்நிலையில், உத்தராகண்டின் ஜான்சர்-பவர் பழங்குடி பகுதியிலுள்ள 25 கிராமங்களில், மது, Fast Food-க்கு தடை விதித்து கிராம சபைக் கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இனி திருமணம் போன்ற நிகழ்வுகளில் மது, பீட்சா, பாஸ்தா, மோமோஸ் போன்ற Fast Food-ஐ விருந்தினர்களுக்கு வழங்கினால் ₹1 லட்சம் அபராதம் விதிக்கப்படுமாம்.


