News October 3, 2024
பெட்ரோல் விலை உயர்வு?

மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றம் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. பீப்பாய் 71 டாலரில் இருந்து 5% அதிகரித்து 75 டாலராக உள்ளது. உலகில் மூன்றில் ஒரு பங்கு நாடுகளுக்கு தற்போது ஈரானில் இருந்து எண்ணெய் வழங்கப்படுகிறது. கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப Petrol, Diesel விலையை இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி வருகின்றன. இதனால், Petrol விலை உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Similar News
News August 16, 2025
வாயில் அடித்து கொண்டு புலம்பல்: CM சாடல்

திமுக கூட்டணி கட்சிகளின் ஒற்றுமை பலரது கண்களை உறுத்துவதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சேலம் இந்திய கம்யூ., மாநில மாநாட்டில் பேசிய அவர், கூட்டணி கட்சிகளின் ஒற்றுமையைப் பார்த்து வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்வதாகவும், எப்படியாவது பிரிந்து விட மாட்டார்களா என புலம்புவதாகவும் கூறியுள்ளார். மேலும், தங்களுக்குள் இருக்கும் கொள்கை நட்பை, தலைமுறை கடந்தும் சொல்லியாக வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
News August 16, 2025
இந்தியாவிற்கு மேலதிக வரி இல்லை: டிரம்ப்

புடின் உடனான பேச்சுவார்த்தைக்கு பின்பு இந்தியா மீதான வரிவிதிப்பு குறித்து டிரம்ப் பேசியுள்ளார். ரஷ்யா கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளான சீனா, இந்தியா போன்ற நாடுகளுக்கு மேலதிக வரிவிதிக்க போவதில்லை எனவும், அப்படி வரி விதித்தால் அந்நாடுகள் பேரழிவை சந்திக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், தங்களுடைய வரிவிதிப்புகளுக்கு பின்னர் ரஷ்யா, இந்தியா போன்ற கஸ்டமரை இழந்துள்ளதாகவும் கிண்டலாக கூறியுள்ளார்.
News August 16, 2025
EPS, விஜய் உடன் கூட்டணி வைப்பது உறுதி: KC பழனிசாமி

BJP-யை கழற்றி விட்டுவிட்டு விஜய் உடன் கூட்டணி வைக்க EPS விரும்புவதாக ADMK Ex MP கே.சி.பழனிசாமி புதிய குண்டை போட்டுள்ளார். தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில், BJP காட்டும் பாதையில் பயணிக்க TTV தினகரன் தயாராகிவிட்டார் என்றும் கூறியுள்ளார். OPS-ன் அரசியல் எதிர்காலம் இனி கேள்வி குறி என்ற அவர், OPS, CM ஸ்டாலினை சந்தித்தது மாபெரும் தவறு என உடைத்து கூறியுள்ளார். இது குறித்து உங்கள் கருத்து என்ன?