News April 10, 2024
தேர்தலை நிறுத்தக் கோரி மனு

திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் தேர்தலை நிறுத்தக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அத்தொகுதியின் பாஜக வேட்பாளர் ₹1500 கோடி மதிப்பிலான சொத்துகளை வேட்புமனுவில் காட்டவில்லை என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நெல்லை தொகுதியில் தேர்தலை நிறுத்திவைக்க வேண்டும் என்று வழக்கறிஞர் மகாராஜா மனு அளித்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.
Similar News
News January 22, 2026
புதுவை: பண்ணை தொழிலுக்கு ரூ.20 லட்சம்!

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் <
News January 22, 2026
EPS வீட்டில் பியூஷ் கோயலுக்கு விருந்து

நாளை PM மோடி தமிழகம் வர உள்ள நிலையில், அதிமுக – பாஜக இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் இன்று காலை EPS வீட்டில் பியூஷ் கோயல் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகளுக்கு விருந்தளிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்சியாக தொகுதி பங்கீடு குறித்து இருதரப்பும் பேச்சுவார்த்தை நடத்துகிறது. நீண்ட நாள்களாக இழுபறியில் உள்ள தொகுதி பங்கீடு இன்று இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News January 22, 2026
நடிகர் கமல் ராய் காலமானார்.. குவியும் அஞ்சலி

நடிகை ஊர்வசியின் குடும்பம் சோகத்தில் மூழ்கியுள்ளது. உயிர்துணையாக இருந்த அவரது சகோதரர் கமல் ராய் (54) மாரடைப்பால் காலமானார். ‘புதுசா படிக்கிறேன் பாட்டு’ என்ற தமிழ் படம் மூலம் நடிப்பு பயணத்தை தொடங்கிய அவர் மலையாளத்தில் ‘தி கிங் மேக்கர்’, ‘லீடர்’ உள்ளிட்ட படங்கள் மூலம் கவனம் பெற்றார். இவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள இயக்குநர் வினயன், அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.


