News February 15, 2025
பிரபாகரன் படத்தை சீமான் பயன்படுத்த தடை கோரி மனு

LTTE தலைவர் பிரபாகரன் படத்தை சீமான் பயன்படுத்த தடை விதிக்க கோரி, சென்னை ஐகோர்ட்டில் வழக்கறிஞர் சார்லஸ் என்பவர் மனுத்தாக்கல் செய்துள்ளார். பிரபாகரனுடன் சீமான் இருப்பது போலவும், AK 47 துப்பாக்கி வைத்திருப்பது போலவும் வன்முறை தூண்டும் வகையில் மார்ஃபிங் செய்த படங்களை சீமான் பயன்படுத்தி வருவதாகவும், அரசியல் ஆதாயத்திற்காக அவர் இப்படி செய்வதாகவும் சார்லஸ் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News March 13, 2026
BREAKING: கட்சியில் இணைந்தார் சசிகலா..

அனைத்து இந்திய புரட்சி தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்தில் (அஇபுதமமுக) சசிகலா இணைந்துள்ளார். இக்கட்சிக்கு தென்னந்தோப்பு சின்னத்தையும் அவர் அறிமுகப்படுத்தியுள்ளார். புதிய கட்சியை தொடங்கியுள்ளதாக கூறி கொடியையும் அறிமுகப்படுத்திய அவர், தொண்டர் ஒருவர் தொடங்கிய கட்சியில் தன்னை இணைத்து கொண்டதாக தெரிவித்துள்ளார். வரும் தேர்தலில் தமிழகம், புதுவையில் போட்டியிடவுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
News March 13, 2026
EPS தலைமையில் 10 தோல்விகள்: OPS

ஊர்ந்து சென்று பதவியைப் பெற்று, அதை கொடுத்தவருக்கே நன்றி இல்லாமல் இருப்பவர்தான் அவர் (EPS) என்று OPS விமர்சித்துள்ளார். அவரது பெயரை சொல்லக்கூட தனக்கு விருப்பம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். தென்காசி பரப்புரையில் பேசிய அவர், EPS தலைமையில் அதிமுக சந்தித்த 10 தேர்தல்களிலும் அக்கட்சி தோல்வியை சந்தித்தாக குறிப்பிட்டார். நன்றி மறந்தவர்களுக்கு தமிழக மக்கள் எப்போதுமே வாக்களிக்க மாட்டார்கள் என்றார்.
News March 13, 2026
வங்கிக் கணக்கில் ₹5000 வந்தது.. இன்ப அதிர்ச்சி

தேர்தல் நெருங்கும் நிலையில், புதுச்சேரி அரசு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், 2025-ல் சம்பா பருவத்தில் உயர் விளைச்சல் ரக நெல் சாகுபடி செய்த 5,098 பொதுப் பிரிவு விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ₹5,000 வீதம் ₹4 கோடி ஊக்கத் தொகை, விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. மேலும், பாரம்பரிய நெல் சாகுபடி செய்த 296 விவசாயிகளுக்கு ₹25.5 லட்சம் ஊக்கத் தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது.


