News January 10, 2025
கவர்னர் ஆர்.என்.ரவியை நீக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு

கவர்னர் RN.ரவியை நீக்க உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் வக்கீல் ஜெய்சுகின் என்பவர் ரிட் மனுத் தாக்கல் செய்துள்ளார். கவர்னரின் செயல்பாடுகள் அரசியலமைப்புக்கு எதிராக உள்ளதால் அவரை நீக்க வேண்டும் என தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். கவர்னர் – TN அரசு இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. அண்மையில், சட்டப்பேரவையில் அரசின் உரையை வாசிக்காமல் கவர்னர் வெளிநடப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 25, 2025
உலகப்போரை நிறுத்திய கிறிஸ்துமஸ் பெருவிழா!

1914-ல் முதல் உலகப்போரில் ஜெர்மன்-பிரிட்டிஷ் வீரர்கள் கடுமையாக போரிட்டு கொண்டிருந்த சமயம். டிச., 24-ம் தேதி இரவு, ஜெர்மன் பகுதியில் துப்பாக்கி சத்தத்திற்கு பதிலாக, இனிய கிறிஸ்துமஸ் கீதம் ஒலித்தது. மறுநாள் களத்தில் இருந்த இருநாட்டு வீரர்களும் உணவுகளை பரிமாறி ஃபுட்பால் விளையாடினர். தளபதிகளின் உத்தரவு இல்லாமல் நிகழ்ந்த இந்த ஒருநாள் போர் நிறுத்தம், மனிதநேயத்தின் சாட்சியாக வரலாற்றில் நீடிக்கிறது.
News December 25, 2025
அஜிதா ஹாஸ்பிடலில் அனுமதி.. விஜய் கடும் அப்செட்!

தூத்துக்குடி தவெக <<18649222>>நிர்வாகி அஜிதா ஆக்னல்<<>> உயிருக்கு ஆபத்தான நிலையில், ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாவட்டச் செயலாளர் பதவி தனக்கு வழங்கப்படாததால் நேற்று முன்தினம் தவெக ஆபிஸ் முன்பு தர்ணாவில் ஈடுபட்டதோடு விஜய்யின் காரை வழிமறித்தார். பதவி கிடைக்காத அதிருப்தியில் 2 நாள்களாக சாப்பிடாமல் இருந்த அஜிதா, உடல் நலக்குறைவால் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால், விஜய் கடும் அப்செட் ஆகியுள்ளாராம்.
News December 25, 2025
ATM-ல் பலமுறை CANCEL பட்டன் அழுத்துறீங்களா?

ATM மோசடியில் சிக்கக்கூடாது என்பதற்காக பணம் எடுத்த பிறகு பலமுறை CANCEL பட்டனை அழுத்தும் பழக்கம் பலருக்கு இருக்கிறது. இந்த Cancel பட்டன் பரிவர்த்தனைகளை ரத்து செய்ய மட்டுமே, மோசடிகளை தடுக்க அல்ல என RBI தெரிவித்துள்ளது. மோசடியில் சிக்காமல் இருக்க, PIN நம்பரை மறைத்து உள்ளிடுங்கள். சந்தேகப்படும்படியாக சாதனங்கள் ATM மெஷினில் இருந்தால் வங்கியிடம் புகாரளியுங்கள். பலரது பணத்தை பாதுகாக்கும், SHARE THIS.


