News October 20, 2025

TN-ல் நோட்டரி எண்ணிக்கையை அதிகரிக்க அனுமதி

image

ஒரு ஆவணத்தின் உண்மைத்தன்மையை உறுதி செய்து கையெழுத்திடும் அதிகாரம் பெற்றவர் நோட்டரி. மக்கள் தொகை மற்றும் அரசு அலுவலகங்களின் எண்ணிக்கை அதிகரிப்பால், நோட்டரிக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மாநிலங்கள் கோரிக்கை விடுத்தன. இதை ஏற்று மத்திய சட்ட அமைச்சகம், நோட்டரி விதிமுறைகளில் திருத்தம் செய்துள்ளது. அதன்படி, TN 2,500-ல் இருந்து 3,500 நோட்டரிக்களாக அதிகரித்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Similar News

News March 10, 2026

பெட்ரோல், டீசல் விலை ரூ.22 உயர்வு… எங்கு தெரியுமா?

image

ஈரான் போர் காரணமாக இந்தியா உள்பட உலகில் பல நாடுகளிலும் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இலங்கையில் பெட்ரோல், டீசலுக்கு இப்போதே தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலைகளையும் லிட்டருக்கு (இலங்கை கரன்சியில்) ரூ.22 உயர்த்தி அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் எரிபொருள் விலை உயராது என அரசு அறிவித்துள்ளது நிம்மதி அளித்தாலும், சர்வதேச நிலைமைகளால் சூழல் மாறலாம்.

News March 10, 2026

BIG NEWS: தமிழக தேர்தல் தேதி.. புதிய அப்டேட்

image

TN உள்பட 5 மாநிலங்களில் உள்ள 824 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தலை நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தமிழக சட்டப்பேரவைக்கு ஏப்.23-ம் தேதி தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் தேதியை மார்ச் 15-ம் தேதி CEC அறிவிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது. அப்போது, TN-க்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்துவது குறித்த அறிவிப்பும் வெளியாகும் என கூறப்படுகிறது.

News March 10, 2026

புதிய கவர்னர் மார்ச் 12-ல் பொறுப்பேற்பு

image

தமிழகத்தின் தற்காலிக கவர்னராக நியமிக்கப்பட்ட ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் மார்ச் 12-ல் பொறுப்பேற்கவுள்ளார். மக்கள் மாளிகையில் நடக்கும் நிகழ்வில் ராஜேந்திர விஸ்வநாத்துக்கு ஐகோர்ட் தலைமை நீதிபதி பதவி பிரமாணம் செய்து வைக்கவுள்ளார். கேரளத்தின் ஆளுநராக உள்ள அவர், தமிழக ஆளுநர் பொறுப்பை கூடுதலாக கவனிக்கவுள்ளார். முன்னதாக, TN கவர்னராக இருந்த ஆர்.என்.ரவி மேற்குவங்கத்தின் கவர்னராக மாற்றப்பட்டுள்ளார்.

error: Content is protected !!