News June 6, 2024
ஆசிரியர்கள் வெளிநாடு செல்ல முன் அனுமதி அவசியம்

அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வி இயக்குநரகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், “தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி ஆசிரியர்களும் பணியாளர்களும் வெளிநாடு செல்வதற்கு பள்ளிக் கல்வி இயக்குநரிடம் கட்டாயமாக முன் அனுமதி பெற வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு விடுப்பு வழங்க மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அதிகாரம் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
Similar News
News August 19, 2025
கிட்னிக்கு அடுத்து கல்லீரல் மோசடி

நாமக்கல்லில் கிட்னி முறைகேட்டை தொடர்ந்து கல்லீரல் மோசடியும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 37 வயதான பெண் ஒருவர் தன்னுடைய கடன் காரணமாக ₹8.30 லட்சத்திற்கு கல்லீரலின் ஒரு பகுதியை விற்றுள்ளது தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தை விசாரிக்க, ஏற்கனவே அம்மாவட்டத்தில் சிறுநீரகம் தொடர்பாக விசாரணை நடத்திய IAS அதிகாரி வினித் தலைமையில் குழு அமைத்து சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
News August 19, 2025
‘ஆளே சேர்க்காமல்’ ஸ்டாலினை ஏமாற்றிய திமுக MLA

‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற திமுக உறுப்பினர் சேர்க்கையில் ‘ஆளே சேர்க்காமல்’, மற்றவர்களைவிட அதிகமாக உறுப்பினர்களை சேர்த்ததாக ராமநாதபுரம் மாவட்ட செயலாளரும், MLAவுமான காதர்பாட்சா ரிப்போர்ட் கொடுத்துள்ளார். அவர் சேர்த்ததாக கூறப்படும் உறுப்பினர்கள் யாரும் உண்மையில திமுகவில் சேரவே இல்லை என்பதை, திமுகவிற்கு ஆதரவாக செயல்படும் நிறுவனம் கண்டறிந்து, அதை ஒரு ரிப்போர்ட்டாகவும் முதல்வருக்கு கொடுத்துள்ளது.
News August 19, 2025
ரோகித்துக்கு மாற்று யாரும் இல்லை: ராயுடு

2027 ODI உலகக்கோப்பை வரை ரோகித் ஷர்மா கேப்டனாக நீடிக்க வேண்டும் என முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு வலியுறுத்தியுள்ளார். உலகக்கோப்பை முடியும் வரை ரோகித் ஓய்வை அறிவிக்க கூடாது எனவும், அவரது கேப்டன்சி மற்றும் பேட்டிங்கை வேறு யாராலும் கொடுக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், வீரர்களுக்கு தன்னம்பிக்கை கொடுக்கும் கேப்டனாக ரோகித் செயல்பட்டதாகவும் நினைவுகூர்ந்துள்ளார்.