News January 2, 2025
பாமக போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு

சென்னையில் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த பாமக போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு ஏற்பட்ட வன்கொடுமைக்கு கண்டனம் தெரிவித்து பாமக மகளிரணி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அனுமதியளிக்க போலீசார் மறுத்துள்ளனர். முன்னதாக, அதிமுக, நாதகவினர் போராடி கைதானது குறிப்பிடத்தக்கது.
Similar News
News February 26, 2026
பயிர், நகைக் கடன்.. வந்தாச்சு மகிழ்ச்சி செய்தி

தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் பயிர் கடனுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு, அதே நாளிலேயே கடன் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 1 மாதத்தில் மட்டும் மாநிலம் முழுவதும் 60,000 பேருக்கு சுமார் ₹25 கோடி அளவுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதேநேரம், தேர்தலை முன்னிட்டு, பயிர் கடன், நகைக் கடனை தள்ளுபடி செய்வது குறித்து அரசு பரிசீலித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
News February 26, 2026
6 சீட்டுகளுக்கு 10 கட்சிகள் போட்டி.. இன்று தொடங்குகிறது!

TN-ல் ஏப்.2-ம் தேதி காலியாகவுள்ள 6 ராஜ்யசபா MP-க்களுக்கான தேர்தல் பணிகள் இன்று தொடங்குகிறது. இன்று வேட்புமனு தாக்கல் தொடங்கும் நிலையில் திமுக, அதிமுக இன்னும் வேட்பாளர்களை இறுதி செய்யாமல் உள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விசிக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் சீட்டுக்கு மல்லுகட்டுகின்றன. அதேபோல், அதிமுகவில் பாமக, பாஜக, தமாகா, அமமுகவும் சீட்டுக்கு துண்டு போடுவதால் பெரும் குழப்பம் நீடிக்கிறது.
News February 26, 2026
வேட்புமனு தாக்கல் ஆன்லைனில் மட்டுமே?

இனி சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஆன்லைனில் மட்டுமே தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்வதை ECI அறிவிக்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஆன்லைனில் மனு தாக்கல் செய்யும் வசதி ஏற்கெனவே உள்ளது. ஆனால் இதனை வேட்பாளர்கள் பயன்படுத்த ஆர்வம் காட்டுவதில்லை. இந்நிலையில், நேரில் மனுக்களை சரிபார்ப்பதில் எடுக்கும் நேரத்தை தவிர்க்க ஆன்லைன் முறையை கட்டாயமாக்க திட்டமிடப்பட்டுள்ளதாம்.


