News August 4, 2024
கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்க: OPS

தமிழ்நாட்டில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பூதியத்தில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென OPS வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் உள்ள 164 அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் 80% பேர் கவுரவ விரிவுரையாளர்களாக பணியாற்றிவருவதாகக் கூறிய அவர், அந்த ஆசிரியர்களின் நிலையை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு அரசுப்பணியை திமுக அரசு உறுதி செய்ய வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News November 23, 2025
சினிமா பிரபலம் விபத்தில் பலி.. நெஞ்சை உலுக்கும் (PHOTO)

பிரபல பஞ்சாபி பாடகர் <<18360848>>ஹர்மன் சித்து(37)<<>> பயணித்த கார் லாரி மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது, பாலிவுட் மற்றும் பஞ்சாபி ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து நிகழ்வதற்கு சற்று நேரத்திற்கு முன்புதான் தனது மகளிடம் அன்பாக பேசிவிட்டு பூ ஒன்றை பரிசாக கொடுத்துவிட்டு சென்றுள்ளார். கவலையில் ஆழ்ந்துள்ள அந்த பிஞ்சு குழந்தைக்கு யார் ஆறுதல் சொல்வது. So sad!
News November 23, 2025
அரசியலை விட்டு விலகத் தயார்: D.K.S சவால்

டி.கே.சிவகுமாருக்கு CM பதவி தர வலியுறுத்தி, அவரின் ஆதரவு MLA-க்கள் போர்க்கொடி தூக்கியுள்ளதால், கர்நாடக அரசியலில் குழப்பம் எழுந்துள்ளது. காங்., தலைமை சமாதான பேச்சை தொடங்கியுள்ள நிலையில், அமித்ஷாவுடன் DKS-க்கு தொடர்பு இருப்பதாக சித்தராமையா ஆதரவாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால், கடுப்பான DKS, அமித்ஷாவுடன் தொடர்பில் இருப்பதை நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயார் என சவால் விடுத்துள்ளார்.
News November 23, 2025
‘சென்யார்’ புயல்: பெயரின் அர்த்தம் தெரியுமா?

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் உருவாகும் என கணிக்கப்பட்டுள்ள புயலுக்கு ‘சென்யார்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு அரபிக் மொழியில் சிங்கம் என அர்த்தம். பொதுவாக புயல்களுக்கு பெயர் சூட்ட ஒவ்வொரு நாடும் 5 பெயர்களை பரிந்துரைக்கும். அந்த பட்டியலில் இருந்துதான் IMD குறிப்பிட்ட பெயரை தேர்வு செய்கிறது. இந்த பெயரை UAE பரிந்துரைத்தது குறிப்பிடத்தக்கது. SHARE பண்ணலாமே.


