News March 18, 2024
பெரம்பலூர் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையமான ஆதவ் பப்ளிக் பள்ளியில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாட்டு பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். வாக்கு எண்ணும் மைத்தில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான க.கற்பகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.ஷ்யாம்ளாதேவி ஆகியோர் இன்று(மார்ச் 17) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Similar News
News January 19, 2026
பெரம்பலூர் மாவட்ட முதல் ஆட்சியர் யார் தெரியுமா?

பெரம்பலூர் மாவட்டம் 1995-ம் ஆண்டு செப்.30-ம் தேதி, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டது. இதன் பின் 1995 அக்.13-ம் தேதி பெரம்பலூர் மாவட்டத்தின் முதல் ஆட்சியராக க.நந்த கிஷோர் பொறுப்பேற்றார். 1997ம் ஆண்டு மே 12-ம் தேதி வரை மாவட்டத்தின் வளர்ச்சிப் பயணத்தில் தனது பங்களிப்பைச் செலுத்தினார். தற்போது ஆட்சியராக கிரேஸ் லால்ரின்டிகி பச்சாவ் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. ஷேர் பண்ணுங்க.
News January 19, 2026
பெரம்பலூர்: இனி Gpay, Phonepe தேவையில்லை!

பெரம்பலூர் மக்களே, இனி உங்களது போனுக்கு ரீசார்ஜ் செய்ய அலைய வேண்டாம்! ‘வாட்ஸ் ஆப்’ மூலமாக உங்களது சிம் கார்டின் ரீசார்ஜ், டேட்டா இருப்பு உள்ளிட்டவற்றை அறிய புதிய வழி அறிமுகமாகியுள்ளது. இதற்கு ஜியோ (70007 70007), ஏர்டெல் (24828 20000), Vi (96542 97000) என்ற எண்ணில் ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், Gpay, Phonepe, Paytm இல்லாமலேயே உங்கள் போனுக்கு ரீசார்ஜ் செய்யலாம். SHARE பண்ணுங்க..
News January 19, 2026
பெரம்பலூர் ஆட்சியர் கொடுத்த முக்கிய அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “2025-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருது பெற விரும்புவோர், வருகின்ற 20-ம் தேதிக்குள் விண்ணபிக்கலாம். இது தொடர்பான மேலும் தகவல்களுக்கு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரிய பெரம்பலூர் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகத்தை 8056010150 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.” என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.


