News April 1, 2024

இந்த பிரச்னை உடையவர்கள் பசலைக்கீரையை தவிர்க்கலாம்

image

தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்காதவர்கள், சிறுநீரகக் கல் பிரச்னையை எதிர்கொள்கின்றனர். சிறுநீரகக் கல் என்பது ஆக்ஸலேட் கற்களைக் குறிக்கும். கீரைகளில் சிறுநீரகக் கற்களை உருவாக்கும் ஆக்ஸலேட் அதிகம். அதாவது 100 கிராம் கீரையில் 755 மில்லிகிராம் அளவுக்கு ஆக்ஸலேட் (Oxalates) இருக்கும். எனவே கிட்னி ஸ்டோன் பிரச்னை உள்ளவர்கள், கீரை, குறிப்பாக பசலைக் கீரையை அடிக்கடி உணவில் சேர்ப்பதை தவிர்ப்பது நல்லது.

Similar News

News January 20, 2026

இன்று ஆண்டின் முதல் தமிழக சட்டப்பேரவைக் கூட்டம்

image

இந்த ஆண்டின் முதல் தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் இன்று முதல் (ஜன.,20) தொடங்குகிறது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் காலை 9:30 மணிக்கு தொடங்கும் கூட்டத்தொடரின் தொடக்கத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆளுநர், கடந்த 2 ஆண்டுகளாக முழுமையாக உரையை வாசிக்காமல் வெளிநடப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.

News January 20, 2026

BREAKING: தமிழகம் முழுவதும் இன்று ஸ்டிரைக்

image

சத்துணவு ஊழியர்கள் இன்று முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். காலமுறை ஊதியம், பணிக்கொடை உள்ளிட்ட திமுகவின் வாக்குறுதி 313-ஐ நிறைவேற்றக் கோரி இந்த போராட்டம் நடைபெறவுள்ளது. தலைமைச் செயலகத்தில் சமூக நலத்துறை இயக்குநருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் இந்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது அரசுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும்.

News January 20, 2026

சென்னை வந்தடைந்தார் விஜய்!

image

2-வது முறையாக சிபிஐ விசாரணைக்கு ஆஜராக டெல்லி சென்ற தவெக தலைவர் விஜய் நள்ளிரவு சென்னை திரும்பினார். கரூர் கூட்ட நெரிசல் மரணம் தொடர்பாக சிபிஐ அனுப்பிய சம்மனுக்கு நேரில் ஆஜராகி, அவர்களது கேள்விகளுக்கான விளக்கங்களை அளித்தார். விசாரணை முடிவடைந்ததை அடுத்து, டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு சென்னை வந்தடைந்தார். அவருடன் தவெக நிர்வாகிகளான நிர்மல் குமார் உள்ளிட்டோரும் வந்தனர்.

error: Content is protected !!