News April 1, 2024
இந்த பிரச்னை உடையவர்கள் பசலைக்கீரையை தவிர்க்கலாம்

தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்காதவர்கள், சிறுநீரகக் கல் பிரச்னையை எதிர்கொள்கின்றனர். சிறுநீரகக் கல் என்பது ஆக்ஸலேட் கற்களைக் குறிக்கும். கீரைகளில் சிறுநீரகக் கற்களை உருவாக்கும் ஆக்ஸலேட் அதிகம். அதாவது 100 கிராம் கீரையில் 755 மில்லிகிராம் அளவுக்கு ஆக்ஸலேட் (Oxalates) இருக்கும். எனவே கிட்னி ஸ்டோன் பிரச்னை உள்ளவர்கள், கீரை, குறிப்பாக பசலைக் கீரையை அடிக்கடி உணவில் சேர்ப்பதை தவிர்ப்பது நல்லது.
Similar News
News August 11, 2025
உக்ரைனில் அமைதி திரும்ப உதவுவதாக PM மோடி உறுதி

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி PM மோடியுடன் தொலைபேசி வாயிலாக ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது, ரஷ்யா – உக்ரைன் போர் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை விளங்கியதாகவும், இரு நாடுகளிடையே அமைதி ஏற்பட அனைத்து உதவிகளையும் செய்வேன் எனவும் உறுதி அளித்ததாக PM மோடி தனது X பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். புதின் இந்தியா வரவுள்ள நிலையில், ரஷ்யாவிடம் ஆயில் வாங்குவதை குறைக்க ஜெலன்ஸ்கி வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
News August 11, 2025
கனமழை வெளுக்கும்.. கவனமா இருங்க மக்களே!

சென்னை புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. தஞ்சை, தி.மலை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இரவு 10 மணி வரை சென்னை, செ.பட்டு, திருவள்ளூர், கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சை, வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. இதனால், இரவில் வெளியே செல்வதை தவிருங்கள் மக்களே!
News August 11, 2025
தோனி வாக்குமூலம் அளிக்க ஐகோர்ட் உத்தரவு

₹100 கோடி மானநஷ்ட ஈடு கோரிய வழக்கில் தோனியின் வாக்குமூலத்தை பதிவு செய்ய வழக்கறிஞரை நியமித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. IPL சூதாட்ட வழக்கு தொடர்பாக தனக்கு எதிராக அவதூறு கருத்து கூறியதாக IPS அதிகாரி சம்பத்குமார், ஜீ மீடியாவுக்கு எதிராக 2014-ல் தோனி வழக்கு தொடர்ந்திருந்தார். 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வழக்கு விசாரணையில் உள்ள நிலையில், நீதிபதி CV கார்த்திகேயன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.