News July 27, 2024
சாலையோரம் வசித்த மக்கள் பாரிஸில் இருந்து வெளியேற்றம்

ஒலிம்பிக் போட்டிகளால் விழாக்கோலம் பூண்டுள்ள பாரிஸ் நகரத்தில் சாலையோரம் வசித்த மக்களை பிரான்ஸ் பாதுகாப்பு படையினர் அப்புறப்படுத்தி வருகின்றனர். சாலையோரம் வசித்தவர்களில் பெரும்பாலானோர் ஆப்பிரிக்காவில் இருந்து புலம் பெயர்ந்து வந்தவர்களாவர். ஒலிம்பிக் போட்டிகள் முடியும் வரை அம்மக்களை முகாம்களில் தங்க வைக்க பிரான்ஸ் அரசு முடிவு செய்துள்ளது. அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்புகளும் கிளம்பியிருக்கின்றன.
Similar News
News March 5, 2026
ஈரானுக்கு சீனா உதவியதா?

சீனா ஈரானுக்கு ரகசியமாக ட்ரோன்கள், ஏவுகணைகள், பிற மேம்பட்ட ஆயுதங்கள் மற்றும் முக்கிய தொழில்நுட்பத்தை வழங்கி உதவி செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. சீனாவின் ஆதரவு இல்லாமல் ஈரான் இவ்வளவு நாள் தாக்குப்பிடிக்க முடியாது என்று கூறப்படுகிறது. மேலும், ஈரான் அதன் எதிரிகள் மீது நடத்தி வரும் துல்லியமான தாக்குதல்களை மேற்கோள் காட்டி பின்னணியில் சீனா இருப்பதாக பலரும் விவாதித்து வருகின்றனர்.
News March 4, 2026
சரியான நேரத்தில் சரியான முடிவு.. செல்வபெருந்தகை

<<19298958>>தொகுதி பங்கீடு ஒப்பந்தம்<<>> கையெழுத்தானது திமுக – காங்கிரஸ் கூட்டணியை உறுதி செய்துள்ளது. ஒப்பந்தம் குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய செல்வபெருந்தகை, அகில இந்திய காங்கிரஸ் திமுகவுடன் இணைந்து சரியான நேரத்தில் சரியான முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்தார். இந்த முடிவால் தாங்கள் மனநிறைவோடும் மகிழ்ச்சியோடும் இருப்பதாக கூறினார். மேலும், யார் ராஜ்யசபா MP என்பதை விரைவில் அறிவிப்போம் என்றார்.
News March 4, 2026
புதுச்சேரியிலும் மகளிர் உரிமைத் தொகை ₹5,000

தமிழகத்தை தொடர்ந்து மகளிர் உதவி தொகையை முன்கூட்டியே வழங்க புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதத்திற்கு என மகளிர் உரிமைத் தொகையாக மொத்தம் ₹5,000 வழங்கி தமிழக அரசு இன்ப அதிர்ச்சி கொடுத்தது. இந்நிலையில் அதை பின்பற்றி, ஏப்ரல் மற்றும் மே மாதத்திற்கான மகளிர் நிதி உதவி தொகையான ₹5,000-ஐ முன்கூட்டியே வரவு வைக்க உள்ளதாக புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.


